Thursday, June 30, 2011

ராசா, கனிமொழி இவர்களுக்குப் பிறகு சிபிஐ-யின் அடுத்தக் குறி...தயாநிதி மாறன் மீதா?

விரைவில் மாற்றப்பட இருக்கும் மன்மோகன் சிங்கின் மந்திரி சபையிலிருந்து, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் நீக்கப் பட இருக்கிறார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், புதிய ஏர்செல் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொண்டதாக சர்ச்சையில் சிக்கியுள்ள தயாநிதி மாறன், பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளையும் தவறாக பயன்படுத்தியதாகவும் கூறப்பட்ட சர்ச்சை மீண்டும் எழும்பியுள்ளது.

எனவே, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை சுப்பிரமணிய சுவாமி போன்றோரும், எதிர் கட்சியினரும் எழுப்பியிருந்தனர். அவர் விலகா பட்ச்த்தில் பதவி நீக்கம் செய்யவும் கோரியிருந்தனர்.

இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் படாத சூழ்நிலையில், நேற்று அமைச்சர் தயாநிதி மாறன்  டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசியது, அரசியல் பார்வையாளர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப் படுகிறது.

பிரதமர் தன்னை நீக்கும் முன் தானாக பதவி விலகிக்கொள்வாரா என்ற எதிர்பார்ப்பும் வலுத்துள்ளது. ஆனால் இந்த சந்திப்பின் போது, தானும் பிரதம மந்திரியும் ஜவுளித்துறை சம்பந்தமாக கலந்துரையாடிதாக, நேற்று சிஎன்என்-ஐபிஎன் ஆங்கில செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.


2ஜி ஊழல் சம்பந்தமாக முன்னால் தொலைதொடர்புத்துறை அமைச்சர் எ.ராஜாவும், கனிமொழியும் கைதுசெய்யப் பட்டிருக்கும் இந்த நிலையில், தயாநிதி மாறன் தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்த சமயத்தில் அவர் செய்திருந்த ஊழல்கள் சம்பந்தமான ஆதாரங்கள் சிபிஐ யிடம் மாட்டியிருக்கிறது. எனவே மாறனை காப்பாற்ற திமுக தற்போது சக்தியிழந்து இருப்பதால், நடக்க இருக்கும் மந்திரி சபை மாற்றத்தின் போது உறுதியாக நீக்கப்பட்டு சிபிஐ யின் விசாரணைக்குள் கொண்டுவரவும் ஏற்பாடுகள் நடக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

ஏர்செல் நிறுவனத்தின் முன்னால் அதிபர் சி.சிவசங்கரன், மாறனுக்கு எதிராக கொடுத்திருக்கும் குற்றசாட்டின் படி. 2001-2007 காலவாக்கில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் போது ஏர்செல்லின் பணயத்தை, மலேசிய கம்பெனியான மெக்ஸிஸ் கம்யுனிகேசன் என்ற நிருவனத்திற்க்கு விற்பதற்க்கு, மாறன் கட்டாயபபடுத்தியிருக்கிறார். அதற்கு பதிலாக, மாறனின் குடும்ப சொத்தான சன் டிவிக்கு 600கோடி ரூபாயை அந்த மலேசிய நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது.

ஏர்செல் முன்னால் அதிபர் சிவசங்கரன், ஜுன் 6 2011 அன்று கொடுத்த வாக்குமூலப்படி,  51 விழுக்காட்டுப் ப்ங்கினை வைத்துக்கொண்டு, 49 விழுக்காட்டை விட்டுக் கொடுப்பதாக கூறியதையும் கேளாமல், சிவசங்கரனின் தொழிலுக்கு ஏகப்பட்ட நெருக்கடிகளை கொடுத்து, நடத்தவிடாமல் செய்து, ஏர்செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் கம்பெனிக்கே விற்றுவிட்டு நாட்டைவிட்டே வெளியேறும் படி, மாறன் செய்திருக்கிறார்.
சிவசங்கரன் தற்போது லண்டனில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். அங்கே சென்றுதான் சிபிஐ, மாறன் சம்பந்தப்பட்ட வழக்கை விசாரித்து வருகிறது.

ஆனால், தயாநிதி மாறனோ தன்னை குற்றமற்றவர் என கூறிவருகிறார். “நான் யாரையும் தொழில் செய்யும் படியோ,  அல்லது தொழிலை விற்கும் படியோ நிர்பந்தித்தது கிடையாது. உங்களிடம் நான் ஒன்றை சொல்ல வேண்டும். தன்னை யாரும் நிர்பந்திப்பதாக உணர்ந்தால், அவர்கள் நீதி மன்றத்திற்குத் தானே போயிருக்க வேண்டும்.” என்கிறார் தயாநிதி மாறன்.



யார் என்ன சொன்னாலும், சிபிஐ, தயாநிதி மாறனுக்கு எதிரான கோ(ஆ)ப்புகளை தயார் செய்வதில் மிக மும்மரமாக செயல் பட்டுக்கொண்டிருக்கிறது என்பது  வெட்ட வெளிச்சம்.

ராசா, கனிமொழிக்குப் பிறகு சிபிஐ-ன் அடுத்தக் குறி தயாநிதி மாறன் என்பது வெளியரங்கமான உண்மை...!

’கூடங்குளம் அணு உலையால் தென் மாவட்டங்களுக்கு ஆபத்து’- வைகோ

   நெல்லை மாவட்டம் திசையன்விளையில் மதிமுக 18ம் ஆண்டு துவக்க விழா மற்றும் அரசியல் பிரகடனம் பொதுக்கூட்டம் நேருஜி திடலில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது,

”நான் மதவாதத்தை ஏற்றுக் கொள்ளாதவன். ஈழத்தமிழர்களுக்கு வாஜ்பாய் செய்த உதவியை வேறு எவரும் செய்யவில்லை. விஷபூச்சிகள், நாகபாம்புகள், பண்டாரம், பரதேசிகள் என்று விமர்சித்த திமுக மத்திய அமைச்சரவையில் இடம்பெற வாஜ்பாய் அரசுக்கு ஆதரவு தெரிவித்தது. ஜெயலலிதா இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி பிரபாகரனை கைது செய்து கொண்டு வரவேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தபோது இதற்கு நான் கண்டன அறிக்கை வெளியிட்டேன். நான் விடுதலை புலிகளை நேற்றும் ஆதரித்தேன். இன்றும் ஆதரிக்கிறேன். நாளையும் ஆதரிப்பேன்.”

”மதிமுக இருப்பது தமிழ்நாட்டிற்கு நல்லது. தமிழர் உரிமைக்கு நல்லது. முல்லை பெரியார், காவிரிக்காக போராடும். ஸ்டெர்லைட், கூடன்குளம் அணு உலையை எதிர்த்து போராடும். கூடன்குளம் அணு உலை அமைக்க அறிவிப்பு வந்தபோது பார்லிமென்டில் அதனை எதிர்த்து பேசிய ஒரே எம்.பி.நான் மட்டும்தான். கடல் கொந்தளிப்போ, நில அதிர்வோ, பூகம்பமே ஏற்பட்டு கூடன்குளம் அணு உலைக்கு ஆபத்து ஏற்பட்டால் தென்மாவட்டங்கள் அழிந்துபோகும். ஐரோப்பிய நாடுகளில் அணு உலைகள் மூடப்பட்டு கொண்டிருக்கின்றன.

       கூடன்குளம் மின்சாரத்தை கேரளாவுக்கும், ஆந்திராவுக்கும் மற்ற மாநிலங்களுக்கும் தந்து எங்கள் தலையில் கொள்ளி வைத்து, இதை நாங்கள் சுமக்கணுமா?

       இலங்கையில் சிங்களனுக்கு துணையாக சீனாவும், பாகிஸ்தானும் வந்துவிட்டது. நம் இந்திய மீனவர்கள் இன்றும் தாக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 543 மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் 800 பேர் காணாமல் போய்விட்டனர். தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இலங்கையின் கடற்படை இங்கு வந்து தாக்க இந்திய இலங்கை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம்தான் காரணம்.

      அன்றைய முதல்வரும் கடிதம் எழுதினார். இன்றைய முதல்வரும் கடிதம்தான் எழுதுகிறார். ஆனால் இந்திய பிரதமர் இலங்கை கடற்படைக்கு ஒருமுறை கூட எச்சரிக்கை செய்தது கிடையாது.”

    ”கேரள முதல்வர் முல்லை பெரியார் அணையை கட்டுவோம் என்கிறார். இதை மத்திய அரசு அனுமதித்தால் அன்றைய தினமே ஒருமைப்பாடு உடைந்துபோகும். கேரள மக்களை நான் நேசிக்கிறேன். அங்கு கடல், நதி, நீரோடைகள் வளம் உண்டு. ஆனால் விவசாயத்திற்கு காணி நிலம் கிடையாது. தமிழ்நாடு தான் அரிசி, பால், காய்கறிகள் தரவேண்டும். எங்களுக்கு கேடு செய்துவிட்டு நீ எப்படி இருக்க முடியும். முல்லை பெரியார் அணை விஷயத்தில் மத்திய அரசு ஒரு எச்சரிக்கை கொடுக்க வேண்டும்.

       இலங்கையில் எங்களது பெண்களை கற்பழித்து கொன்றுள்ளார்களே எங்காவது ஒரு சிங்களப் பெண்ணையாவது விடுதலை புலிகள் பாலியல் பலாத்காரம் செய்தனர் என்று ராஜபக்ஷே குற்றம் சாட்டியது உண்டா? அப்படி நிருபிக்கப்பட்டால் நான் தமிழ் ஈழத்தை ஆதரித்து பேசுவதை விட்டு விடுகிறேன். நாங்கள் தமிழர்களாக பிறந்தததை விட என்ன பாவம் செய்தோம். நாங்களும் ஒருநாள் அரசின் அதிகாரத்தை வெல்வோம், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோம்” என்றார்.

Wednesday, June 29, 2011

உலகில் நீரிழிவு நோய் இரு மடங்கியது ....!அதிர்ச்சியூட்டும் தகவல் !!

உலகத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது கடந்த 1980 ஆம் ஆண்டில் இருந்ததை விட இப்போது இரட்டிப்பாகியுள்ளது.
            இந்த தகவலை லான்செட் மருத்துவ மாத இதழ் வெளியிட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்போடு இணைந்து பணியாற்றிய சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவானது, நீரிழிவு நோயானது உலகத்தின் அனைத்து பகுதிகளில் ஒன்று அதிகரித்துள்ளது அல்லது இருந்த அளவிலேயே தான் இருக்கிறது, குறையவில்லை என தெரிவித்துள்ளனர்.
               கடந்த 1980 ஆம் ஆண்டில் இருந்து 2008 ஆம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 15.3 கோடியில் இருந்து 34.7 கோடியாக அதிகரித்துள்ளது.
                இந்த அதிகரிப்பில் 70 சதவீதம், ஜனத்தொகை அதிகரிப்பு மற்றும் வயோதிகத்தினால் ஏற்பட்டுள்ளது என்றும், மீதமுள்ள 30 சதவீதம் உடல் பருமன் போன்றவற்றால் ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.
      முன்பு உலகம் முழுவதும் சுமார் 28.5 கோடி பேர் தான் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று எண்ணப்பட்டிருந்தது, ஆனால் தற்போது 34.7 கோடி பேர் பாதிப்பட்டுள்ளார்கள் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
           நீரிழிவு நோயில் மிக பரவலாக காணப்படுவது டைப்-2 எனப்படும் இரண்டாவது வகையே ஆகும். இந்த டைப்-2 ஏற்படுவதற்கு உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே காரணமாக கூறப்படுகிறது.
இந்த வகை பாதிப்பை கொண்டவர்கள், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க முடியாமல் இருக்கின்றனர், இதனால் இருதய பாதிப்பு, பக்கவாதம் மற்றும் சிறுநீரகம் மற்றும் கண்கள் போன்றவற்றுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும்.
        சீனா மற்றும் இந்தியாவில் மட்டும் சுமார் 13.8 கோடி பேர் நீரிழிவு நோயோடு இருக்கின்றனர். அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் 3.6 கோடி பேர் இருக்கின்றனர்.
நீரிழிவை கட்டுப்படுத்த தேவையான மருந்தின் விற்பனையானது கடந்த ஆண்டு 35 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது 2015 ஆம் ஆண்டு வாக்கில் 48 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. 

Tuesday, June 28, 2011

”இந்திய ராணுவத்திற்கு நாங்கள் இணையாக மாட்டோம்” பாக்கிஸ்தான் பாதுகாப்பு மந்திரி கருத்து.


இஸ்லாமாபாத்: ”பெரிய போரைகூட தாங்கிக் கொள்ளக்கூடிய, இந்தியாவின் அதிநவீன ராணுவ தளவாடங்களுக்கு இணையாக, பாக்கிஸ்தானும் அடைவது என்பது இயலாத காரியம்.” என்று, பிபிஸி உருது செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் போது, பாக்கிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் சௌத்ரி அஹ்மத் முக்தார் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் தன் கருத்தை வலியுறுத்தும் வகையில் மேலும், “இந்தியாவின் பொருளாதாரம் பாக்கிஸ்தானைவிட ஆறிலிருந்து ஏழு மடங்கு பெரியது, வியாபார மதிப்பு ஐந்திலிருந்து ஆறு மடங்கு பெரியது” என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியா, பாக்கிஸ்தானின் பெரிய எதிரி என்று காட்டப் படுகிற கருத்துப் பற்றி கேட்கப் பட்ட கேள்வி ஒன்றிற்கு அவர் பதிலளிக்கையில், ’அது நாட்டின் ஆரம்பகால பிரச்சனையினால் உண்டானது,

மேலும், 2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு, இரு நாட்டு உறவிலும் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

  இரு நாடுகளுக்கும் இடையே போர்கள் நடந்திருக்கின்றன, எல்லை பிரச்சனைகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன, மும்பை தாக்குதலால் பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தாலும்,

  மெல்ல மெல்ல பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியிருக்கின்றன, மக்கள் எல்லையை கடந்து செல்ல முடிகிறது. வாகா (Wagah) விலிருந்து அமிர்தசரஸ் வரை கையில் பெட்டியுடன் செல்ல முடியும் எனபது யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள், ஆனால் அந்த உண்மை நடந்திருக்கிறது, என்று பிபிஸி உருது செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் போது, பாக்கிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் சௌத்ரி அஹ்மத் முக்தார் கருத்து தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு,தமிழக அரசின் இலவச மடிக் கணினி, கூடவே தலையில் பாரம்.!

 
மாணவர்களுக்கு இலவச மடிக் கணினி என்ற அ இஅதிமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தமிழக அரசு தயாராகிக்கொண்டிருக்கிறது. 
 
       மொத்தம் 9.12 லட்சம் கணினிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுகின்றன.
கடந்த வாரம் உலக அளவில் ஒப்பந்தப் புள்ளி அறிவிப்பு வெளியானது. இந்த வாரத்தில் வாங்கும் விலை குறித்து முடிவெடுக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 

        முதற்கட்டமாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இக் கணினிகள் வழங்கப்படவிருக்கிறது. பின்னர் அரசு பொறியியல் ம்ற்றும் கலைக் கல்லூரி, தவிரவும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் அவை வழங்கப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 68 லட்சம் கணினிகள் வழங்கப்படும்.
        இதற்காக 10.200 கோடி ரூபாய் செல்வாகும் எனக் கூறப்படுகிறது.
கணினிகளை வாங்கும் பணி அரசு நிறுவனமான எல்காட்டிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. விண்டோஸ் மற்றும் இலவச மென்பொருள் பொருத்தப்பட்டு கணினிகள் வழங்கப்படும். 

         ஆனால் இரண்டையும் இணைப்பது சில சிக்கல்களை உருவாக்கும், விண்டோஸ் அறிமுகச் சலுகையாக ஓராண்டிற்கு மென்பொருளை இலவசமாகத் தருவதாகக் கூறினாலும், தொடர்ந்து அதனைப் பயன்படுத்த மாணவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும், அது தேவையில்லாத் சுமை, இலவச மென்பொருளையே பயன்படுத்தவேண்டும் என்று வல்லுநர்கள் பலர் கருதுகின்றனர். 

       ஆனால் இலவச மென்பொருள் நீண்டநாட்கள் பயன்படக்கூடிய அளவு போதிய உத்திரவாதம் இல்லாததால் தான் விண்டோசும் தரப்படுகிறது என எல்காட் அதிகாரிகள் கூறுகின்றனர்.

'உத்தேச லோக்பால் மசோதாவின் விசாரணை வரம்புக்குள் பிரதமரைச் சேர்க்கக் கூடாது ' ஜெயலலிதா வலியுறுத்தல்.!

தற்போது மிகுந்த சர்ச்சையில் உள்ள உத்தேச லோக்பால் மசோதாவின் விசாரணை வரம்புக்குள் பிரதமரைச் சேர்க்கக் கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் ‘பிரதமர் ஏற்கனவே ஊழல் தடுப்புச் சட்ட வரம்புக்குள் சேர்க்க்பபட்டுள்ளார். பிரதமர் தவறு செய்தால், சிபிஐ விசாரிக்க முடியும். சில நேரங்களில், லோக்பால் அமைப்பைப் பயன்படுத்தி, அரசை ஸ்திரமற்றதாக்க வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கலாம்’ என்றார் ஜெயலலிதா.
கடந்த ஆண்டு, காங்கிரஸுக்கு ஆதரவளிப்பதாக தான் தெரிவித்தது அந்தச் சூழ்நிலையில் தெரிவித்த கருத்து என்று ஜெயலலிதா கூறினார். அதே நேரத்தில், எதிர்காலத்தில் காங்கிரஸுடன் கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு ஜெயலலிதா, அதை இப்போது சொல்வது கடினம் என்றும், அரசியலில் எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸுடன் இருந்த கசப்புணர்வு குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது, கடந்த காலத்தை தோண்டிப்பார்க்கக் கூடாது என்றும், அரசியலில் அனுபவமும் முதிர்ச்சியும் ஏற்படும்போது, நிலைமையை எப்படி சமாளிப்பது என்று கற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
வரும் 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பே இடைத் தேர்தல் வருவதற்கும், அரசியலில் அணி மாற்றங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் ஜெயலலிதா தெரிவித்தார்.
கடந்த திமுக அரசால் கொண்டுவரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை ரத்து செய்துவிட்டது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது, மக்களுக்குப் பயனடையும் திட்டங்களை ரத்து செய்யவில்லை என்றும், அரசுப்பணத்தை வீணடிக்கும் திட்டங்கள் மற்றும் திமுகவினர் பலன்பெறுவதற்காகக் கொண்டுவரப்பட்ட திட்டங்களை மட்டுமே ரத்து செய்ததாகவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிப்பது தொடர்பாகவும், கச்சத்தீவை மீட்பது தொடர்பாகவும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

Monday, June 27, 2011

ஜுன் 27 திங்கள் அன்று பூமியை நோக்கி வந்த வின்கல்லின் இடியிலிருந்து பூமி தப்பியது.!

       புது டெல்லி . ஜுன் 28.
           “2011 MD” என பெயரிடப்பட்ட அந்த வின்கல், பூமியை இடிப்பதற்க்கு 7500 கிலோ மீட்டர் தூரத்திலேயே தெற்க்கு அட்லாண்டிக் பகுதிக்கு மேலாக, மதியம் 1மணிக்கு வந்து சென்றது.
               சோலார் சிஸ்டத்தில் இது மிகவும் நெருக்கமான தூரமாக கருதப் படுகிறது. காரணம், பூமிக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட தூரத்தில் இது மூன்றே மூன்று விழுக்காடாகும், இது சாதாரண டெலஸ்கோப் மூலம் பார்க்ககூடிய தூரமாகும்.
 அனிமேசனை காணவும்.
      ஆனால் இந்த வின்கல் பூமியின் மீது விழுந்திருந்தால், அதன் மூலம் அழிவு ஏதும் உண்டாக வாய்ப்பில்லை என நாசா விஞ்ஞானிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இந்த மாதிரி சைஸ் கொண்ட வின்கல், எரிகல்லாக பூமிக்குள் நுழையும் போது கண்கவர் நெருப்பு பந்தாக தோன்றி அதன் சாம்பல் அல்லது அதன் சிறிய துகழ்கள் கடலிலோ, நில பரப்பிலோ விழுந்திருக்கும். பூமிக்கு எந்தவித பாதிப்பும் உண்டாகியிருக்காது.
       துரதிஷ்டவசமாக, பெரிய வின்கல் விழும் போது தான் பூமிக்கு, குறிப்பிட்டுச் சொல்லும் படியான சில அழிவுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, 112 மைல் அளவுள்ள வின்கல் பூமியின் மீது விழுந்த போது டைனோசர் அழிந்தது.
        ஆனால் அது போன்ற பெரிய வின்கற்கல் ஏதும் பூமியை நோக்கி வரும் என்றால் அதை சில வருடங்களுக்கு முன்னரே கண்டுபிடித்துவிட முடியும்.
        விஞ்ஞானிகளின் கணக்குப்படி, பொதுவாக 490 அடிக்கு அதிக அகலமுள்ள வின்கல் பூமியின் மீது விழுந்தால் தான் பாதிப்பு இருக்கும் என்கிறார்கள்.
      வரும் 2029 ஆம் ஆண்டு, 900 அடி அளவுள்ள வின்கல் ஒன்று பூமியை 18,000 மைல் தூரத்தில் கடக்க இருக்கிறது. ஆனால் கவலைப் படவேண்டாம் என விஞ்ஞானிகள் ஆறுதல் கூறுகிறார்கள்.

Tuesday, June 21, 2011

சூப்பர் ஸ்டார்-னா இப்படியா நடிக்கணும்.....?




'ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!''

''ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்  பட்டு விட்டது!''

மேற்கண்ட இரண்டையும் சொன்னது வேறு யாருமில்லை, நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.


ஒரு ஆட்சியின் அவல நிலையைக் கண்டு அந்த ஆட்சியை விமர்சிப்பதில் தவறில்லை. ஆனால்  அது வெளிப் படையாக இருக்க வேண்டுமே தவிர தொழிலுக்கேற்ப நடிப்பாக இருக்கக் கூடாது. தமிழகத்தைக் கருணாநிதி ஆண்ட 5 வருடங்கள் கருணாநிதி கதை வசனம் எழுதிய திரைப் படங்களை அவருடன் கண்டு களித்து தன் காரியங்களைச் சாதித்துக்  கொண்ட ரஜினி, தற்போது தமிழகம் காப்பாற்றப் பட்டு விட்டதாக திருவாய் மலர்ந்து இருக்கிறார்.

பாட்சா பட வெற்றி விழாவின் போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி குறித்து "தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் குண்டு வெடிப்புகள்; தமிழகத்தில் அமைதியில்லை" என்று பேசி படத் தயாரிப்பாளரான முன்னாள் அமைச்சர் ஆர்.எம் வீரப்பனின் பதவிக்கு வேட்டு வைத்தவர். இன்று ஜெயலலிதா முதல்வரானதன் மூலம் தமிழகத்தைக் கருணாநிதியிடம் இருந்து காப்பாற்றி விட்டார் என்றும் ஜெயலலிதா முதல்வராகா விட்டால் கருணாநிதி தமிழகத்தை ஒரு வழி பண்ணி இருப்பார் என்றும் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

''என் ஒரு ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுப்பது தமிழ் அல்லவா என் உடல் பொருள் அனைத்தையும் தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா'' என்று பாட்டு பாடும் ரஜினி, தன்னுடைய ரசிகர்களுக்காகவும் தமிழர்களுக்காகவும் என்ன செய்து விட்டார் என்று பட்டியலிடத் தயாரா? குறைந்தப் பட்சம் தன் மனைவி நடத்தும் ஆஸ்ரம் பள்ளியில் தன் ரசிகர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்குவாரா?  காவிரி தண்ணீர் பிரச்னைக்குத் தனியாக உண்ணாவிரதம் இருந்து தமிழர்களின் ஒற்றுமைக்கு வேட்டு  வைப்பார். ரஜினிக்கு நிஜமாகவே தமிழர்கள் மீதும் தமிழ்நாட்டின் மீதும் அக்கறை இருந்தால் தேர்தலுக்கு முன்பே   தன் நிலையைத் தெளிவாகச் சொல்லி தமிழகம் எப்படி காப்பாற்றப் பட வேண்டும் என்றும்  தெரிவித்து இருந்தால் இன்று ரஜினி பேசுவதை அவரின் நடிப்பில்லை என்று நாம் நம்பலாம்!

ஒரு வேளை அதிமுக ஆட்சிக்கு  வராமல் திமுகவே மீண்டும்  ஆட்சி அமைத்து இருந்தால் "தமிழகம் காப்பாற்றப் படவில்லை" என்று ரஜினி தெளிவாக அறிவித்து இருப்பாரா என்ற நியாயமான கேள்விக்கு  அவரின் மனசாட்சிதான் பதில் சொல்ல  வேண்டும்.

தமக்கு  காரியம் ஆக வேண்டும் என்றால், மொழி, இன அடிப்படையில் மக்களிடையே வேற்றுமையை விதைத்து நாட்டு ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் பால் தாக்கரே  போன்ற மத துவம்சம் பிடித்தவர்களையும் தெய்வம்  என்பார். ஐந்து ஆண்டு கால ஆட்சியின் போது கருணாநிதியைப் பற்றியோ கருணாநிதியின் ஆட்சியை பற்றியோ வாய் திறக்காத ரஜினி, தேர்தலில் வாக்களித்த பின்பு  மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகக் கூறினார். தற்போது தமிழகம் காப்பாற்றப் பட்டு விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கமல் - ரஜினி இவரில் நடிக்கத் தெரிந்தவர் யாரென்று கேட்டால் பட்டெனப் பதில் வரும் கமல்தான் என்று. ஆனால் உண்மையிலேயே கமலைவிட நடிக்க மட்டுமல்ல, வசனம் பேசவும் தெரிந்தவர் ரஜினிதான் என்பதை அவர் பேசியதாக வெளியான இத்தகவல் மூலம் அறிய முடிகிறது.

"உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்கமாட்டேன்..." என்ற பாடலை அவர் எழுதாவிட்டாலும் அவர் பாடுவது போன்று அமைக்கப்பட்டதால், ரஜினியே சொல்வது போன்றுதான் இன்றும் அவரது ரசிகர்கள் நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், உப்பிட்ட மண்ணை மறந்துவிட்டுத் தன்னுடைய வருமானத்தையெல்லாம் தன் தாய் மண்ணிலே முதலீடு செய்துள்ளார். ஒகனேக்கல் குடிநீர்த் திட்டத்தில் எழுந்த பிரச்னையில் ரஜினி நடித்த திரைப்   படங்களை கர்நாடக மாநிலத்தில் திரையிட விட மாட்டோம் என்று கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் பிரச்னை செய்த போது, உடனே மன்னிப்பு கேட்டு சமாதானம் பேசி, தான் நடித்த குசேலன்  திரைப் படத்தை வெளியிட்டார்.
ரஜினிகாந்த்  என்று அழைக்கப்படும் ஸிவாஜிராவ் கெய்க்வாட் ஒரு நடிகர்; தேர்ந்த நடிகர். நடிப்பு அவருக்கு வருவாய் ஈட்டும் தொழில். அரிதாரம் பூசி அவர் போடும் வேடங்கள்  அவரின் உண்மையான குணாதிசயங்கள் அல்ல. அரிதாரத்தைக் கலைத்த பின் அவர் ஸிவாஜிராவ் கெய்க்வாட் எனும் தனி நபர். இது நடிப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும்  பொருந்தும். தமிழ்நாட்டில் நடிகர்களின் ரசிகர்கள், தாம் விரும்பும் நடிகர்கள்  திரையில்  செய்யும் ஸூப்பர்மேன் சாகசங்களை நிஜ வாழ்விலும் செய்வர் என நம்பிக்கொண்டு அவர்களைத் தங்களுக்குத் தலைவர்களாக வரித்துக் கொண்டு, அவர்களின் கட்அவுட்டுக்கு  மாலையிட்டுச் சூடம் கொளுத்திப் பாலாபிஷேகம் செய்கின்றனர்.
       ரஜினிக்கு இணையாக சமகால நடிகர்கள் பலர் இருந்தும், ரஜினியைச் சுற்றிலும் ஓர் அரசியல் ஒளிவட்டத்தை ஏற்படுத்தி அதில் பலனடைந்தவர்கள் எல்லோருமே சினிமாத்துறை சார்ந்தவர்களே என்பது வெள்ளிடைமலை! இருப்பினும் 30+ ஆண்டுகள் ஆகியும், இனியும் அவர் நேரடி அரசியலில் ஈடுபட்டு ஒளியேற்றுவார் என்று நம்பும் அப்பாவி ரஜினி ரசிகர்களை நினைக்கும்போது, ரஜினியின் வசனத்தில் "அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது" என்றே கருத வேண்டியுள்ளது.

சினிமா வசனகர்த்தா எழுதிக்கொடுத்த அவர் நடித்த படங்களிலுள்ள வசனங்களைக்கூட, அரசியல் கட்சிகளுக்கான மறைமுக எச்சரிக்கை என்று ரசிகர்களை ஏமாற்றியதில் ஊடகங்களின் பங்கும் இருப்பதை மறுப்பதற்கில்லை. சினிமா நடிகர்களில் ரஜினிமீது ஊடகங்கள் காட்டிய கரிசனம், பாரபட்சமானது என்பதையும் வெட்கத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஆட்சி மாறும்போது ஒரே வாசகங்களை மாற்றி மாற்றிப் போட்டு முதல்வர்களுக்கு பாராட்டு விழா என்ற பெயரில் ஜால்ரா அடித்த திரை உலகினரை நன்றாக புரிந்து வைத்திருந்த ஜெயலலிதா, இம்முறை அது தன்னிடம் நடக்காது என்பதைத் தனிப்பட்ட தொலைப்பேசி உரையாடலில் ரஜினி கூறிய வாசகத்தை அரசு அறிக்கையாக வெளியிட்டு ரஜினிக்கு நாமம் போட்டுக் காட்டியுள்ளார். ஆரம்பத்தில், ஆட்சிப் பொறுப்பேற்றதும் தனக்குப் "பாராட்டு விழா" நடத்த தேதி கேட்டு வந்த திரை உலகத்தினரைத் திருப்பியனுப்பி, இனிமேலும் உங்களின் அரிதார அற்ப ஜால்ரா புகழுரைகள் என்னிடம் பலிக்காது என்று முதல்வர் ஜெயலலிதா சம்மட்டியால் அடித்து விரட்டியது பாராட்டத்தக்கது!  இது போன்ற சினிமாத் துறையினரின் சந்தர்ப்பவாத  பேச்சுக்களை கருணாநிதி போன்ற அரசியல் சாணக்கியர்கள் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.

நோய் வாய்ப்பட்டுள்ள நிலையில் ரஜினியை இகழ்ந்து பேசுவது நமது நோக்கமல்ல. தமிழகமே அவர் மீது பித்தம் கொண்டது போன்ற தோற்றத்தை உருவாக்கி, அவரது ஒவ்வொரு அசைவையும் செய்திகளாக்கி, காசு பார்க்கும் ஊடக வியாபாரிகளின் பொறுப்பற்றத்தன்மையை வெளிச்சமிட்டுக் காட்டுவதோடு, நேரத்துக்கும் காலத்துக்கும் தகுந்ததுபோல் தன் நிலைபாடுகளை மாற்றி நிஜ வாழ்விலும் சிறந்த நடிகர்களாக வலம்வரும் இவர்களை நம்பியிருந்து தம் வாழ்வைத் தொலைக்காமல் நாட்டுக்கும் வீட்டுக்கும் நலம் பயப்பவர்களாக தம் வாழ்வை இளைஞர்கள் மாற்றியமைத்துக் கொள்ள சுட்டுவதே நம் நோக்கம்!

நன்றி:- இந்நேரம்.காம்.


பாபா ராம்தேவ் ஒரு போலி பாபா!


 பாபா ராம்தேவ் ஒரு போலி பாபா என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
பாபா ராம் தேவ் நடத்தும் ஆசிரமத்திற்கு ரூ.1,100 கோடி சொத்திருப்பதாக கணக்கு காட்டுகிறார்கள். இதை எங்கிருந்து எடுத்தார்கள். எப்படி இவர்களுக்கு இது வந்தது. இதிலிருந்தே பாபா ராம்தேவ் ஒரு போலி பாபா என தெரிகிறது என் காங்கிரஸ் பொது செயலர் பி.கே.ஹரிபிரஷாத் தெரிவித்துள்ளார்.

கறுப்பு பணத்தை பற்றி பேசுவதற்கு முன் தான் முறையற்ற விதத்தில் சேர்த்த ரூ.1,100 கோடி ரூபாய்க்கு அவர் கணக்கு காட்டட்டும். இந்த பணத்தை மக்களுக்கு கொடுக்கட்டும் ஹரிபிரசாத் தெரிவித்தார் மேலும் தெரிவித்தார்.

ஊழலுக்கு எதிராக கடந்த 8 தினங்களாக உண்னாவிரதமிருந்தது வந்த பாபா ராம்தேவ் ஸ்ரீ ஸ்ரீ  ரவிசங்கரின் கோரிக்கையின் படி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே.

மேலும் லோக்பால் மசோதா திட்ட வரைபுக்குழுவில் இடம்பெற்றிருக்கும் மக்கள் பிரதிநிதிகளும் தமது சொத்துக்களுக்கு கணக்கு காட்டவேண்டும் எனவும் தெரிவித்துள்ள ஹரி பிரசாத், ஏன் கர்நாடக முதல்வர், எடியூரப்பாவுக்கு எதிராக இந்த ஊழல் குற்றச்சாட்டு எதையும் பாபா ராம்தேவ் முன்வைக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

Monday, June 20, 2011

அமெரிக்க நீதிமன்றம் சம்மன்: நிராகரித்தார் ராஜபக்சே

தமிழரைக் கொன்றதற்காக 30 மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு தொடரப்பட்ட வழக்கில் அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு  அனுப்பி இருந்த சம்மனை 
நிராகரித்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


இலங்கையின் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ராகியர் மனோகரன் என்பவர் கொல்லப்பட்டதற்கு அந்நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கு தலைவர் என்ற முறையில் ராஜபக்சே நஷ்டஈடு தரவேண்டும் என்று கோரி அமெரிக்காவைச் சேர்ந்த அவரது உறவினர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.

இலங்கை விதிகளின்படி அதிபர் விதிவிலக்கு பெற்றவர் என நீதித்துறை அமைச்சகச் செயலர் சுகதா காம்லத் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சம்மன்களுக்கு நாங்கள் பதிலளிக்க மாட்டோம். எங்களது சட்ட நிலைப்பாடு குறித்து கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்துக்கு கடந்த வாரமே தெரிவித்துவிட்டேன் என காம்லத் குறிப்பிட்டார்.

ஐநா சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ராஜபக்சே செப்டம்பரில் நியுயார்க் வரவிருக்கிறார். இந்த நிலையில் அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது இலங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ராஜபக்சே அமெரி்க்கா செல்வதை தடுக்க முடியாது:

இந் நிலையில் ராஜபக்சே அமெரிக்கா செல்வதை யாரும் தடுக்க முடியாது என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

ராஜபக்சேவுக்கு சம்மன் அனுப்பப்பட்டாலும் சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரகடனத்தின்படி அரசு பதவியில் உள்ள தலைவர்களுக்கு விதிவிலக்கு உள்ளதாகவும், இதனால் அவரது பயணத்தைத் தடுக்க முடியாது என்றும் இலங்கை தெரிவித்துள்ளது.


இலங்கையின் கொலைக்களம்


கொழும்பு: இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கான வீடியோ ஆதாரங்களை முழுமையாக வெளியிட முடிவெடுத்துள்ள பிரிட்டனின் சேனல் 4, அதற்கான விளம்பரங்களை பெரும் செலவில் வெளியிட்டு வருகிறது.

"இலங்கையின் கொலைக்களம்" என்னும் தலைப்பில் இந்த விளம்பரங்கள் உலகின் முன்னணி நாளிதழ்களில் வெளியாகியுள்ளன.

இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விடியோவின் முழுத் தொகுப்பை இதில் ஒளிபரப்பவுள்ளது சேனல் 4. 


த சண்டே டைம்ஸ், த இன்டிபென்டன்ட், மெயில் ஒன் சண்டே உள்ளிட்ட பிரிட்டன் பத்திரிகைகளில் இந்த விளம்பரம் வெளியாகியுள்ளன.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை வெளிப்படுத்தவும், தமிழர் அல்லாதவர்களும் இந்த விடியோ காட்சியை பார்க்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலும் பெரும் செலவில் இந்த விளம்பரங்களை சேனல் 4 வெளியிட்டு வருகிறது.

உலகின் மிகக் கொடூரமான போர்க்குற்ற வீடியோ

மேலும், ஜூன் 14-ம் தேதி சேனல் 4-ல் ஒளிபரப்பவிருக்கும் இலங்கை போர்க்குற்றம் தொடர்பான விடியோ குறித்து பிரிட்டன் தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு தமிழர் அமைப்புகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
அதேநேரம், உலக வரலாற்றில் மிகக் கொடூரமான இந்த வீடியோ பதிவுகளை கர்ப்பிணிகள், பலவீனமான இதயமுள்ளோர் பார்க்க வேண்டாம் என சேனல் 4 தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இறுதிப் போரில் நடந்த அத்தனை போர்க்குற்றங்களுக்கும் முழுப் பொறுப்பு இலங்கை ராணுவமே என்பதற்கு 100 சதவீத ஆதாரங்களை இந்த வீடியோ பதிவுகள் வெளிக்கொணரவிருப்பதால், இலங்கை பெரும் அச்சத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த வீடியோ வெளியாவது, இலங்கைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்த உள்ளது. பிரிட்டிஷ் அரசு பொருளாதாரத் தடைகளை இலங்கைக்கு எதிராக பிரயோகிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.





பிரதமர் அலுவலகத்தின் நேரடி ஒப்புதலுடனேயே செயல்பட்டதாக முன்னாள் அமைச்சர் இராசா அதிர்ச்சி செய்தி.!

      பிரதமர் அலுவலகத்தின் நேரடி ஒப்புதலுடனேயே செயல்பட்டதாக முன்னாள் அமைச்சர் இராசா அதிர்ச்சி செய்தி.!

          2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில் தான் வெளிப்படையாக செயல்பட்டதாகவும், தனது அனைத்து நடவடிக்கைகளும் பிரதமர் அலுவலகத்தின் நேரடி ஒப்புதலுடனேயே இருந்ததாகவும் தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் இராசா நீதிமன்றத்தில் தனக்காக தானே வாதிட்டு உண்மைகளை எடுத்துக் கூற திட்டமிட்டுள்ளார் என்ற செய்தி டெல்லி வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.

          2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கின் முக்கியக் குற்றவாளியாக மத்திய புலனாய்வுக் கழகத்தால் குற்றஞ்சாற்றப்பட்டு 3 மாதங்களுக்கு மேலாக டெல்லி திகார் சிறையில் இருக்கும் ஆ.இராசா, இவ்வழக்கை விசாரித்துவரும் ம.பு.க. சிறப்பு நீதிமன்றத்தின் முன் தன்னை பிணைய விடுதலை செய்யக்கோரும் மனு மீது தானே வாதாட முன்வந்துள்ளார் என்று அவருடைய வழக்குரைஞர் நண்பர்கள் தெரிவித்துள்ளதாக டெல்லி செய்திகள் தெரிவிக்கின்றன.

            வழக்குரைஞரான ஆ.இராசா, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக தான் கடைபிடித்த நடைமுறைகள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய 18 கடிதங்களை ஆதாரமாகக் காட்டி வாதிட திட்டமிடுகிறார் என்பதே டெல்லியில் பரவியுள்ள அதிர்ச்சி செய்தியாகும்.

              2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கை விசாரித்துவரும் ம.பு.க.சிறப்பு நீதிமன்றத்தில் பிணைய விடுதலை கோரி விரைவில் இராசா மனு செய்யவுள்ளார். அப்போது அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக தான் கடைபிடித்த வழிமுறைகள் பற்றி பிரதமருக்கு எழுதிய 18 கடிதங்களையும், அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திற்கும், பிறகு நிதியமைச்சராக பிரணாப் முகர்ஜிக்கும் தான் எழுதிய கடிதங்களையும், அதில் தொலைத் தொடர்புத் துறை பின்பற்றிய கொள்கைகளின் அடிப்படையிலேயே தனது நடவடிக்கை அமைந்ததையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, தனது அனைத்து நடவடிக்கைகளும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களின் ஒப்புதலுடனே முன்னெடுக்கப்பட்டது என்பதையும், தனது துறை அதிகாரிகளின் துணையோடும், பெரு நிறுவனங்களுடனும் கூட்டுச் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி அலைக்கற்றை ஒதுக்கீடு வழங்கியதாக தனக்கு எதிராக மத்திய புலனாய்வுக் கழகம் கூறியுள்ள குற்றச்சாற்று அடிப்படையற்றது என்பதையும் எடுத்துக் கூறவுள்ளார்.

           முதலில் வரும் நிறுவனத்திற்கு முதலில் உரிமம் வழங்கப்படும் என்று கூறிவிட்டு, பிறகு முதலில் உரிமத்திற்கான கட்டணத்தைச் செலுத்தும் நிறுவனங்களுக்கு முதலில் உரிமம் என்று மாற்றியதையும், உரிமம் பெறுவதற்கான ஒப்பந்தங்களை அளிக்க வேண்டிய தேதியை ஒரு வாரம் முன்னதாகவே நிர்ணயித்து அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததையும் ‘குற்றம் செய்யும் திட்டத்துடன் மேற்கொள்ளப்பட்ட குற்ற நடவடிக்கைகள்’ என்று மத்திய புலனாய்வுக் கழகம் இராசா மீது குற்றஞ்சாற்றியிருந்தது.

            அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான விண்ணப்ப இறுதி தேதியை 2007ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 25ஆம் தேதிக்கு மாற்றியதையும், இப்போதுள்ள தொலைத் தொடர்பு கொள்கையின் கீழ் அலைக்கற்றை ஒதுக்கீட்டை முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதற்கும் பிரதமரிடம் கடிதம் மூலம் தெரியப்படுத்திய பின்னரே செய்யப்பட்டது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்கவும் இராசா தயாராகவுள்ளதாகக் கூறியுள்ளார்.

            அதுமட்டுமின்றி, அலைக்கற்றை ஒதுக்கீடு அளிக்க முடிவு செய்த நிறுவனங்கள் பற்றி அயலுறவு அமைச்சரிடமும் (பிரணாப் முகர்ஜி), இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரிடமும் தான் விவாதித்ததாக இராசா கூறுகிறார். பிரதமருக்கு இராசா எழுதிய கடிதங்கள் அனைத்திற்கும் வருகை உறுதியை மட்டும் பிரதமர் செய்துள்ளார். எனவே தனக்கு எதுவும் தெரியாது என்று டெல்லியில் ஊடக ஆசிரியர்களுக்கு பிரதமர் கூறியது உண்மையில்லை என்றாகிறது. அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக தான் எடுத்த முடிவுகளுக்கு பிரதமர் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை என்பதே இராசாவின் நிலையாகும்.

         இராசா முன்வைக்கப்போகும் வாதங்களில் இருந்து ஒன்று உறுதியாகிறது. அது என்னவெனில், இராசா தன்னிச்சையாக செயல்படவில்லை என்பதும், அவர் எடுத்த நடவடிக்கைகள் அனைத்திற்கும் பிரதமர் உட்பட அமைச்சரவையின் ‘மெளன’ சம்மதம் இருந்துள்ளது என்பதே.

          2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு இதுவரை சென்றுள்ள பாதை என்பது, இராசாவை மையப்படுத்தியதாகவும், பிரதமருக்கோ அல்லது அமைச்சரவைக்கோ அதில் எந்த தொடர்பும் இல்லை என்பது போன்றே இருந்தது. ஆனால் இராசா திட்டமிட்டுள்ள வாதம் இந்த அடிப்படையை நிச்சயம் நொறுக்கிவிடும் என்பது மட்டுமின்றி, பிரதமர் சார்பாக நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய நிலையும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

           இராசா தொடர்ந்து சொல்லிவந்த மற்றொரு விஷயம் இந்த வழக்கின் போக்கை மேலும் சிக்கலாக்கும். அது, தான் கடைபிடித்த கொள்கை அனைத்தும், தனக்கு முன்னால் இருந்த அமைச்சர்கள் கடைபிடித்ததுதான் என்பதே அது. அதாவது தனக்கு முன்னர் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் பின்பற்றிய வழிமுறைகளும், அவர் செய்த அலைக்கற்றை ஒதுக்கீடுகளும் நீதிமன்ற பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அது இந்த வழக்கை மேலும் விரிவாக்கும் என்று கூறப்படுகிறது.

Sunday, June 19, 2011

கற்ப்பழிக்க முயன்ற இரு வெறியர்களால், கத்தியால் குத்தப்பட்டு, சிறுமி கண்களை இழந்த கொடூரம்,

கன்னுஜ்:- உத்தரபிரதேசம்,குர்புராவில் உள்ள கன்னுஜ் கிராமத்தில், 14 வயதுடைய, ப்ரீதீ என்ற சிறுமி, அவளை கற்ப்பழிக்க முயன்ற இரு வெறியர்களால், கத்தியால் குத்தப்பட்டு, கண்களை இழந்த கொடூரம், நேற்று, சனிக்கிழமை அன்று நடந்துள்ளது.
   குல்தீப் மற்றும் நிரஜ்ஜன் என்ற இரு வெறியர்கள், அந்த சிறுமியை, வயல் வெளிக்கு இழுத்துச் சென்று, கற்ப்பழிக்க முயற்ச்சி செய்த பொது, சிறுமி மறுத்த காரணத்தால் அவள் இரு கண்களையும் கத்தியால் மிருகத்தனமாக குத்தியிருக்கிறார்கள்.
   வயலில் கிடந்த சிறுமியை பார்த்த கிராமத்து ஜனங்களால், அவளை, மருத்துவமணையில் சேர்க்கப்பட்டிருக்கிறாள்.
    சிறுமியின் கண்களின் கருவிழி முழுதும் சேதமடைந்து இருப்பதால், அவள் பார்வையை மீண்டும் அடைவது என்பது முடியாத காரியம், என்று சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
      சிறுமி இப்போது கான்பூர் மருத்துவமணையில் சிகிட்சை பெற்றுவருவதாக தெரிகிறது.
    இதற்கிடையில், குற்றவாளிகளிள் ஒருவனான நிரஜ்ஜன் கைது செய்யப்பட்டிருக்கிறான்.
      “குற்றவாளிகள் இருவரும் சிறுமியின் கிராமத்தை சேர்ந்த்வர்கள் தான்” என்று காவல் துறை அதிகாரி ராஜேந்திர சிங் கூறியுள்ளார்.
     கற்பழிப்பு மற்றும் கொலை முயற்சிக்கான வழக்கு, குற்றவாளிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
      அந்த சிறுமி முதல் முறையாக காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட போது, வழக்கை பதிவு செய்யாது விட்ட காரணத்திற்காக, பணியில் இருந்த ஒரு போலிஸ்காரர் மற்றும் ஒரு சப்-இன்ஸ்பெக்டரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பாடம் புகட்டும் ஆசிரியர்களுக்கு, பாட புத்தகஙகளை நாசப்படுத்தும் வேலை !




சேலம் : சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்தில் பாடங்களை கிழிக்கவும், மையிட்டு அழிக்கவும் கத்திரிக்கோல், ஸ்டீல் ஸ்கேல், பிளேடு, கருப்பு மார்க்கர் பேனாவுடன் இன்று ஆஜராகும்படி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.     கிழிக்கும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

         தமிழகத்தில் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை இந்த ஆண்டும் தொடரலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்காக அச்சிடப்பட்டுள்ள சமச்சீர் கல்வி தமிழ், அறிவியல், சமூக அறிவியல் பாடப் புத்தகங்களில் கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், சிலரது கவிதைகள் இடம் பெற்றுள்ள பக்கங்களை கிழிக்கவும், சில பக்கங்களை கருப்பு மையால் மறைக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

       புத்தகத்தின் பின்பக்கத்தில் உள்ள செம்மொழி மாநாடு லோகோவை பச்சை நிற ஸ்டிக்கரால் மறைக்கவும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பச்சை நிற ஸ்டிக்கர்களை தேவையான அளவு பள்ளிக்கல்வித் துறையே ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளது.
         ஆனால் பக்கங்களை கிழிப்பதற்கு தேவையான பிளேடு, கத்திரிக்கோல், பாடங்களை மறைக்க கருப்பு நிற மார்க்கர் பேனா, ஸ்டீல் ஸ்கேல் ஆகிய பொருட்களை ஆசிரியர்களே கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
          பல மாவட்டங்களில் ‘கிழிப்பு’ பணி நேற்றே தொடங்கியது. ஒன்றரை கோடி புத்தகங்கள் இருப்பதால் ஒரேநாளில் பணி முடியவில்லை. இன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் புத்தக கிழிப்பு பணியில் ஈடுபட ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
         இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ‘‘ஆசிரியர்களை கத்திரிக்கோல், பிளேடு கொண்டு வரச் சொல்வது அநாகரீகமாக உள்ளது. புத்தகங்களை கிழிக்கும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏ.இ.ஓ.க்கள் வாய்மொழியாக எச்சரித்துள்ளனர்’’ என்றனர்.

Saturday, June 18, 2011

New Windows 8 - View.

          புதிய விண்டோஸ் 8 எப்படி இருக்கும்?        ஏற்கனவே விஸ்டா சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதனை இயக்க புதிய ஹார்ட்வேர் சாதனங்களுடன் கூடிய பெர்சனல் கம்ப்யூட்டர் தேவை என்ற கட்டாயத்தினை மைக்ரோசாப்ட் முன்வைத்ததனால், விஸ்டா கம்ப்யூட்டர் பயனாளர்களிடம் சென்றடையாமல் போனது. அந்த தவற்றை மீண்டும் செய்திடாமல் இந்த முறை மைக்ரோசாப்ட் விழித்துக் கொண்டுவிட்டது. எனவே கோடிக்கணக்கான கம்ப்யூட்டர்களை, விண்டோஸ்    8 சிஸ்டத்திற்கு எளிதாக மாறிக் கொள்ளலாம்.
         ஹார்ட்வேர் தேவைக்கென செலவு இருக்காது.
          ட்வீட்டர்-ல் மியவ்னா -ன் செய்திப்படி விண்டோஸ் 8, தனியாரின்  FTP மூலம் ஏற்கனவே ஏற்றப் பட்டு, மிக முக்கியமானவர்களுக்கு மட்டும் டவுண்லோட் செய்து கொள்ள வழி வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-
File : 6.2.7989.0.amd64fre.winmain.110421-1825.iso
Size : 3.54 GB
MD5 : 4480F94C 0E11CE58 DC9B7330 678F07DD
SHA1 : C09CDCEC 2540D93E EBE650B5 21B2F7AE 477A300A


          அண்மையில், தைபே நாட்டில் நடைபெற்ற தொழில் நுட்பக் கருத்தரங்கில், அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8 எப்படி
 இருக்கப்போகிறது என மைக்ரோசாப்ட் நிறுவன  வல்லுநர் மைக்கேல் உரையாற்றியபோது, மைக்ரோசாப்டின் உறுதியான சில அம்சங்கள் குறித்து கூறியுள்ளார்.
     தொழில் நுட்பத்தின் அடிப்படையில் பார்க்கையில், விண்டோஸ் 8, குறைந்த மின்சக்தியில் இயங்கும் ஏ.ஆர்.எம். சிப்களில் செயல்படக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.
     திரை தொட்டு இயக்கும் திறனும், எச்.டி.எம்.எல். 5 தொழில் நுட்பத்துடன் இணைந்து செயல்படும் திறனும் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
      மக்களுக்குப் பயன்படும் விஷயங்களில், முதலாவதாக, விண்டோஸ் 8 சிஸ்டம் இயங்க, இப்போது விண்டோஸ் 7 பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களை மாற்ற வேண்டிய தேவை இருக்காது.
    புதிய கம்ப்யூட்டர் வாங்கினால் தான், விண்டோஸ் 8 பயன்படுத்த முடியும் என்ற நிலையை உருவாக்கி, புதிய சிஸ்டம் மக்களிடம் செல்லாத ஓர் சூழ்நிலையை முன்னர் போல், இந்த முறையும் ஏற்படுத்தக் கூடாது என மைக்ரோசாப்ட் மிகக் கவனமாக இம்முறை செயல்பட்டிருக்கிறது.
     அடுத்ததாக, விண்டோஸ் 8 பயன்படுத்த இருக்கும் யூசர் இன்டர்பேஸ் எனப்படும் பயன்படுத்துபவருக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு இடையே உள்ள செயல்பாட்டை எளிதாக்கும் வழி முறை ஆகும்.
        இதனை Immersive UI என மைக்ரோசாப்ட் அழைக்கிறது. "கவனத்தை முழுவதும் கவர்ந்த இடைமுகம்' என்பது இதன் பொருள். புதிய மற்றும் பழைய ஹார்ட்வேர் கொண்ட கம்ப்யூட்டர் அனைத்திலும் தன்னை மாற்றிக் கொண்டு இயங்கும்படி இது அமைக்கப்படுகிறது. இந்த இடைமுகம் சரிப்பட்டு வராது என எண்ணுபவர்கள், வழக்கம்போல, தற்போதைய ஏரோ வகை இடைமுகத் தினைப் பயன்படுத்தலாம்.
     விண்டோஸ் 8 சிஸ்டம் தொடுதிரையில் தொட்டு இயக்கும்படியாக அமைக்கப் படுகிறது. எனவே இதன் முழுப் பயனும் தொடுதிரை உள்ள மானிட்டர்களைக் கொண்டு பெர்சனல் கம்ப்யூட்டர்களை இயக்குபவர்களுக்குக் கிடைக்கும். தொடுதிரை செயல்பாடு மட்டுமின்றி, பல வகையான சென்சார் செயலாக்கமும் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தரப்பட்டுள்ளது. இதனால் மோஷன் செயலாக்கம், திரைக்கு அருகில் செல்லும் தூரம் ஆகியன மூலமும் சில பயன்பாடுகள் கிடைக்கும். தொடுதிரை மானிட்டர்கள் இல்லாதவர்களுக்கு வழக்கம்போல பயன் பாட்டினை மேற்கொண்டு அனுபவிக்கலாம்.
    புதிய இடைமுகத்தில் பெரிய அளவில் வண்ணங்களில் ஐகான்கள் அமைக்கப் படுகின்றன. விண்டோஸ் போன் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தரப்படும் தொழில் நுட்பமும் தோற்றமும் இந்த வகையில் தரப்படுகின்றன. இருப்பினும் தற்போதைய பழக்கப்படி மவுஸ் மற்றும் கீ போர்டு மூலமும் சிஸ்டத்தினை இயக்கலாம். பேஜ் அப் மற்றும் பேஜ் டவுண் கீகள் மூலம் அப்ளிகேஷன் டைல்ஸ் இடையே செல்லலாம். ஒரு மவுஸ் கிளிக் மூலம் இவற்றை இயக்கலாம். கீ போர்டில் இப்போது போல, ஷார்ட் கட் கீகள் மூலமும் இயக்கலாம்.
         இருப்பினும் சில விஷயங்களை இப்படித் தான் இருக்க வேண்டும் என மைக்ரோசாப்ட் கூறி வருகிறது. மானிட்டர் திரை விண்டோஸ் 8 சிஸ்டத்தின் முழுமையான பயன்களைப் பெற வேண்டும் என்றால், திரை 16:9 என்ற வகையில் ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டு அமைக்கப்பட வேண்டும். 1366x768 என்ற ரெசல்யூசனுக்குக் குறையாமல் திரை இருக்க வேண்டும். 1024x768 என்ற ரெசல்யூசனில் உள்ள திரைகளிலும் இந்த சிஸ்டத்தின் பயன்பாடுகள் கிடைக்கும் என்றாலும், 1366x768 என்ற வகைதான் சிறப்பான பயன்பாட்டினைத் தரும் என்று மைக்ரோசாப்ட் கூறுகிறது.
       விண்டோஸ் 8 எப்போது வெளியாகும் எனச் சரியான தேதி அறிவிக்கப் படவில்லை. ஆனால் எப்படியும் 2012ல் வெளியாகும் என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
        எனவே விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரும்போது, அதனைத்தான் பயன்படுத்த வேண்டும் என விரும்பும் வாடிக்கையாளர்கள், இப்போதே மேலே கூறப்பட்ட மானிட்டர்களையும், தற்போதுள்ள ஹார்ட்வேருக்குச் சற்று கூடுதலான திறன் கொண்ட கம்ப்யூட்டர் களையும் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

        மிக விரைவில் வர இருக்கும், விண்டோஸ் 8-ன் முகப்பு படத்தை கீழே காணலாம்.





     சில கருத்தாளர்களின் கூற்றுப்படி, விண்டோஸ் 8ஆனது, ஏறக்குறைய, விண்டோஸ் 7ஐப்போன்றே இருக்கக்கூடும், உள் சமாச்சாரதில் பெரிய வித்தியாசம் ஏதும் இருக்கப்போவதில்லை என்கிறார்கள்.

       சாதாரண மக்களுக்கு கிடைத்துள்ள செய்தி என்னவென்றால், ‘டொரண்டில்’ ஏற்கனவே, இந்த விண்டோஸ் 8, ஏற்றப்பட்டு விட்டது.


   


Friday, June 17, 2011

Rajini's message from hospital

Head LIne.

 அரசியலுக்கு வராத அரசியல்வாதி?

உடல் நலம் தேறி வீடு திரும்பும்முன்னர், ஜெயலலிதா உடன்  தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, ரஜினி பேசும்போது, தான் ஆஸ்பத்திரியில் இருந்து வந்தஉடன், முதல் முதலாக பேச விரும்பியது ஜெயலலிதா உடன் தான்,என்ற செய்தி வந்தது,
      இப்போது, ஜெயலலிதா தேர்தலில் வெற்றி அடைந்ததன் மூலம், தமிழ்நாடு காப்பர்ற்ற பட்டுவிட்டதாக, ரஜினி கூறியிருப்பதாக , தினமலர் பத்திரிகையின் வலையேட்டில், மிக சிறிய அளவில் ஒரு செய்தி காணப்படுகிறது.
   ரஜினிகாந்த் உடல் நலம் இன்றி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த வேலையில், தான் நடக்க சிரமப்பட்டாலும், சக்கர வண்டியில் அமர்ந்து போய்,
ரஜினிகாந்தின் உடல் நலத்தை விசாரித்துவந்த, கருணாநிதி அவர்களின் மனம் வருத்தப்படுமா  அல்லது முதிர்ச்சி தந்த அனுபவத்தில் இதை எல்லாம் ஏற்று கொள்வாரா?
   அல்லது, ஜெயலலிதா அவர்களின் மனம், "இந்த மாதிரி சந்தர்ப்பவாத ரஜினி பல பேர்களை நான் பார்த்து இருகண்ட " என்று சொல்லுமா?

Rajini discharged from Hospital - Video.



சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவந்த ரஜினிகாந்த், உடல் நலம் தேறி, வீடு திரும்பினார்.

அந்தோனி வைனருக்கு  வரவேற்ப்பு

வலைதளத்தில் அமெரிக்க எம்.பிஆண்டனி வெய்யினரின் ஆபாச படம். குட்டு வெளியானதால் ராஜினாமா  செய்தார்.எம்.பி.

உஷாரான போட்டோ கிராப்பர்
நியூயார்க்: சமூக வலைதளங்கள் மூலமும்,ஆன்லைன் மூலம் தனது நிர்வாணப்ப‌டத்தை பெண்களுக்கு அனுப்பியதாக எழுந்த புகாரின் பேரில் அமெரிக்க எம்.பி.தனது பதவியை ராஜினாமா செய்தார். அமெரிக்க பார்லிமென்டான காங்கிரஸ் சபையில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர் நாற்பத்தாறு வயதான ஆண்டனி வெய்யினர் . இவர் டுவீட்டர் இணையதளத்தில் வாயிலாகவும், ஆன்லைன் மூலம் தனது நிர்வாணப்படங்களை, பல பெண்களின் இ-மெயில் முகவரிக்கு அனுப்பியுள்ளார். இது தொடர்பாக இவர் மீது பல்வேறு செக்ஸ் குற்றச்சாட்டுகள் இருந்‌ததை அமெரிக்க பத்திரிகைகளும் அவ்‌வப்போது வெளியிட்டன. எனினும் கடந்த மூன்று ஆண்டுகளாக இவர் டீவிட்டர் வலைதளம் மூலம் பெண்களுக்கு ஆபாச படங்களை அனுப்பியுள்ளதை, வாஷிங்டன் பல்கலை. மாணவர்கள் சிலர் கண்டுபிடித்துள்ளனர். இவரது நடவடிக்கை வெட்டவெளிச்சமானதை தொடர்நது நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தனது எம்.பி.பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்தார். இதற்கான கடிதத்தினை சபாநாயகர் நான்சிபலோசி மற்றும் பார்லிமென்ட்‌ செயலக அதிகாரிகளிடம் அளித்துவிட்டதாக தெரிவித்தார். கடந்த 1998-ம் ஆண்டு முதல் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு வந்தார். அடுத்த நடக்கவுள்ள நியூயார்க் நகர மேயர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருந்தார். அதற்குள் செக்ஸ் புகாரில் சிக்கி எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக கடந்த
2005-ம் ஆண்டு நடந்த நியூயார்க் நகர மேயர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் .

Dawood Ibrahim in another face.!

அமெரிக்கர்களை முட்டாளாக்க, தாவூத் இப்ராகிம்-பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாக அமெரிக்க இணையதளம் பரபரப்பு தகவல்
வாஷிங்டன்: உலகிலேயே மிக மோசமான பயங்கரவாதிகளான அய்மேன் அல் ஜாவாஹிரி, சிராஜ் ஹக்கானி, மேஜர் இக்பால், சஜித் மிர் மற்றும் தாவூத் இப்ராகிம் ஆகியோரை கைது செய்வதில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., கவனம் செலுத்த வேண்டும் என, அமெரிக்க வெளியுறவு கொள்கைகள் தொடர்பான இதழின் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது: உலகின் நம்பர் ஒன் பயங்கரவாதியான ஒசாமா பின்லாடனை சுட்டுக் கொன்ற பின், அவரைப் பற்றி அமெரிக்காவின் உளவுப் பிரிவுக்கு தகவல் கொடுத்தவர்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., கண்டுபிடித்து கைது செய்துள்ளது. மிக விரைவில் இதைச் செய்துள்ளது. அதே நேரத்தில், உலக நாடுகளால் தேடப்படும், பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் மிக மோசமான பயங்கரவாதிகளை மட்டும் ஐ.எஸ்.ஐ.,யால் கண்டுபிடிக்க முடியவில்லை. பாகிஸ்தானில், பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளான அய்மேன் அல் ஜாவாஹிரி, சிராஜ் ஹக்கானி, மேஜர் இக்பால், சஜித் மிர் மற்றும் தாவூத் இப்ராகிம் ஆகியோரை, ஐ.எஸ்.ஐ., கைது செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.

மும்பையில், 2008ம் ஆண்டில் நடந்த தாக்குதலில் தொடர்புடைய சஜித் மிருக்கு, லஷ்கர்- இ- தொய்பா மற்றும் ஐ.எஸ்.ஐ.,யுடனும் தொடர்பு உண்டு. ஆனால், இதை ஐ.எஸ்.ஐ., மறுத்து வருகிறது. மும்பை சம்பவத்தில், அமெரிக்காவின் டேவிட் ஹெட்லியை, பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட வலியுறுத்தியவரும்
சஜித் மிர் தான். சஜித் பேசிய தொலைபேசி உரையாடலில் இருந்து இது தெரிய வந்துள்ளது. இப்போதைய அல்-குவைதா தலைவர் அய்மேன் அல் ஜாவாஹிரியும், ஆப்கானிஸ்தானில், அமெரிக்கப் படைகளுக்கு எதிராக ஆயுதங்கள் வழங்கி, பயங்கரவாதிகளை பணியில் அமர்த்திய சிராஜ் ஹக்கானியும் பாகிஸ்தானில் தான் பதுங்கி இருக்கின்றனர். 2008ல், மும்பையில் தாக்குதல் நடத்த மேஜர் இக்பால் தான் நிதி உதவி அளித்ததாக அமெரிக்காவில் கைதான டேவிட் ஹெட்லி தெரிவித்துள்ளார்.
மும்பையில், 1993ல் நிகழ்ந்த தொடர்ந்த தொடர் குண்டு வெடிப்பில் ஏராளமான அப்பாவி மக்கள் பலியாயினர். இந்த தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி தாவூத் இப்ராகிமும் பாகிஸ்தானில் தான் மறைந்திருக்கிறார். அவர் தன் அடையாளத்தை மறைப்பதற்காக, முகத்தில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இவருக்கும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.,யுடன் தொடர்பு உள்ளது. இவர்களை எல்லாம் பிடிப்பதில் ஐ.எஸ்.ஐ., தீவிர கவனம் செலுத்த வேண்டும். மிக விரைவாக இதைச் செய்ய வேண்டுமென இணையதளத்தில் கூறப்பட்டு உள்ளது .

 
Design by Nellai Murasu Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons