Saturday, July 30, 2011

சௌதியில் பிறைவந்தால் தான் மலப்புரத்தில் ரமலான் ஆரம்பமாகும் விநோதம்..!



உலகெங்குமுள்ள இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலான் மாதம். இம்மாதத்தில் முதல் பிறைகண்ட பின்னரே புனித நோம்பு ஆரம்பமாகும்.

உலகில் பல தரப்பட்ட இடங்களில், பிறையின் தோற்றத்தில் மாறுபாடு தெரியுமாதலால்,  இந்த தெளிவின்மையை தவிர்பதற்காக, இஸ்லாமியர்கள் தாங்கள் வாழும் இடத்தில் பிறை தோன்றிய பின்னர் தான் ரமலான் நோன்பை ஆரம்பிப்பது ஐதீகம்.

இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் இந்தியாவில் தோன்றும் பிறைகண்டும், பாகிஸ்தானில் வாழும் இஸ்லாமியர்கள் பாகிஸ்தானில் தெரியும் பிறைகண்டும், சௌதியில் வாழும் இஸ்லாமியர்கள் சௌதியில் தோன்றும் பிறைகண்டபின்னரும் நோன்பை ஆரம்பிப்பார்கள்.

இதற்கு விதிவிலக்காக, கேரளா மலப்புரத்தில் வாழும் இஸ்லாமியர்கள், இந்தியாவில் ரமலான் பிறை தோன்றினாலும் சரி தோன்றாவிட்டாலும் சரி, சௌதியில் பிறை தோன்றியபின்னர் தான் ரமலான் நோம்பை ஆரம்பிக்கிறார்கள்.

இது இஸ்லாத்திற்கு ஒத்த காரியமா என்பதை இஸ்லாத்தின் வேத வல்லுநர்கள் தான் கூறமுடியும்.

இன்று இரவு பிறை தெரியாத காரணத்தால், நாளை மாலையில் தெளிவாக தெரியும் எனவே திங்கள் கிழமை ரமலான் ஆரம்பமாகும் என்று பஹ்ரைன் அஸ்ட்ரனாமிகல் சொஸைடி அறிவித்துள்ளது. இதுவே  சௌதி அரேபிய அஸ்ட்ரனாமிகல் சொஸைடியின் டெபுடி சேர்மன் ஷரப் அல் ஸுஃபானியின் கருத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Design by Nellai Murasu Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons