Sunday, July 3, 2011

மனைவியின் மரித்த உடலுடன் வாழும் கணவர்...!!


மனைவின் மீது, மீளா அன்பு வைத்திருந்த, வியட்நாமைச் சோ்ந்த Le Van என்பவர் 2003 ம் ஆண்டு அவருடைய மனைவியை இழந்தார். அவருடைய மனைவி இறந்த பிறகு மனைவியின் கல்லறை மேல் தூங்கி வந்தார். 55 வயது மதிக்கதக்க Le Van 2004 ம் ஆண்டு வரை மனைவியின் கல்லறையில் தூங்கி வந்தார்.


இரவில் மனைவி இல்லாமல் அவரால் தூங்க முடியவில்லை மற்றும் கல்லறைக்கு வெளியே காற்றும் மழையும் அதிகமாக இருந்த காரணத்தால், அவர் கல்லறையில் சுரங்கம் அமைக்க முடிவு செய்தார். பின்பு அவருடைய மனைவியை கல்லறையிலிருந்து தோண்டியெடுத்து காகிதம் மற்றும் களிமண்வார்ப்புகளை வைத்து போர்த்தி முகத்தின் மேல் ஒரு முகமுடி போட்டு மூடி வைத்து வீட்டில் தூங்க வந்துள்ளார்.

கட்டியவளை,
சிறு காரணத்திற்க்காக கொல்லும் இக்காலத்தில்,
நேசித்தவள் பிணமானாலும்
இவன் அன்பு சாகவில்லை!
அன்பே தெய்வம் என்று இதற்க்குத்தான் சொன்னார்களோ?


0 comments:

Post a Comment

 
Design by Nellai Murasu Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons