Saturday, July 30, 2011

தொழுகைக்கு டிமிக்கி கொடுக்கும் சௌதி அலுவலகப் பெண்கள்..!



இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றாகிய ஐவேளை தொழுகையை நிர்பந்தப்படுத்தியாவது தொழவைக்கும் சௌதிஅரேபியாவில், அலுவலகத்தில் பணிபுரியும் சௌதிப் பெண்கள், வேலை நேரத்தில் வரும் தொழுகைகளை தவிர்க்க முயற்சிக்கிறார்கள்.

சௌதி அரேபியாவில், அலுவலகங்களில் பணிபுரியும் இஸ்லாமிய பெண்கள், ‘துஹ்ர்’ மற்றும் ‘அஸ்சர்’ தொழுகைகளை கடைபிடிக்காமல் தவிர்க்க முயல்வதாக ரியாத்திலிருந்து வெளிவரும் ‘அராப் நியூஸ்’ செய்தி நாளிதழ் நடத்திய சர்வே மூலம் தெரியவந்துள்ளது.

அதற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுவது..மேக்கப்!

பெண்கள் பணிபுரியும் இடங்களில், தொழுகைக்கு முன் செய்யப்படவேண்டிய உடல் சுத்திகரிப்பு(வஸூ)க்காக மேக்கப்பைக் களையவும், தொழுகை முடிந்தபின் மேக்கப் செய்துகொள்வதற்கு போதிய இடவசதி அலுவலகங்களில் கொடுக்கப்படாததாலும், முக அழகை களையவும் மீண்டும் இட்டுக்கொள்வதற்கு நேரம் அதிகம் எடுத்துக்கொள்வதால் அலுவலக வேலைகள் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டும், பெரும்பாலான பெண்கள் தொழுகையை கடைபிடிப்பதில்லை என சர்வேயின் முடிவு தெரிவித்துள்ளது.

நீண்டதூரம் பயணம் செய்கிறவர்கள், தொழுகையை தவற விடாமல் இருப்பதற்காக , நெடுஞ்சாலையி ஓரங்களில் இருக்கும் பெட்ரோல் பங்க்குகள், சிற்றுண்டி சாலைகளோடு தொழுகைக்கான இடமும் அமைக்கப்பட வேண்டும் என்பது சௌதி சட்டம், என்பது இங்கு குறிப்பிடப் படவேண்டிய ஒன்றாகும்.

0 comments:

Post a Comment

 
Design by Nellai Murasu Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons