Saturday, July 30, 2011

சௌதியில் பிறைவந்தால் தான் மலப்புரத்தில் ரமலான் ஆரம்பமாகும் விநோதம்..!



உலகெங்குமுள்ள இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலான் மாதம். இம்மாதத்தில் முதல் பிறைகண்ட பின்னரே புனித நோம்பு ஆரம்பமாகும்.

உலகில் பல தரப்பட்ட இடங்களில், பிறையின் தோற்றத்தில் மாறுபாடு தெரியுமாதலால்,  இந்த தெளிவின்மையை தவிர்பதற்காக, இஸ்லாமியர்கள் தாங்கள் வாழும் இடத்தில் பிறை தோன்றிய பின்னர் தான் ரமலான் நோன்பை ஆரம்பிப்பது ஐதீகம்.

இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் இந்தியாவில் தோன்றும் பிறைகண்டும், பாகிஸ்தானில் வாழும் இஸ்லாமியர்கள் பாகிஸ்தானில் தெரியும் பிறைகண்டும், சௌதியில் வாழும் இஸ்லாமியர்கள் சௌதியில் தோன்றும் பிறைகண்டபின்னரும் நோன்பை ஆரம்பிப்பார்கள்.

இதற்கு விதிவிலக்காக, கேரளா மலப்புரத்தில் வாழும் இஸ்லாமியர்கள், இந்தியாவில் ரமலான் பிறை தோன்றினாலும் சரி தோன்றாவிட்டாலும் சரி, சௌதியில் பிறை தோன்றியபின்னர் தான் ரமலான் நோம்பை ஆரம்பிக்கிறார்கள்.

இது இஸ்லாத்திற்கு ஒத்த காரியமா என்பதை இஸ்லாத்தின் வேத வல்லுநர்கள் தான் கூறமுடியும்.

இன்று இரவு பிறை தெரியாத காரணத்தால், நாளை மாலையில் தெளிவாக தெரியும் எனவே திங்கள் கிழமை ரமலான் ஆரம்பமாகும் என்று பஹ்ரைன் அஸ்ட்ரனாமிகல் சொஸைடி அறிவித்துள்ளது. இதுவே  சௌதி அரேபிய அஸ்ட்ரனாமிகல் சொஸைடியின் டெபுடி சேர்மன் ஷரப் அல் ஸுஃபானியின் கருத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழுகைக்கு டிமிக்கி கொடுக்கும் சௌதி அலுவலகப் பெண்கள்..!



இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றாகிய ஐவேளை தொழுகையை நிர்பந்தப்படுத்தியாவது தொழவைக்கும் சௌதிஅரேபியாவில், அலுவலகத்தில் பணிபுரியும் சௌதிப் பெண்கள், வேலை நேரத்தில் வரும் தொழுகைகளை தவிர்க்க முயற்சிக்கிறார்கள்.

சௌதி அரேபியாவில், அலுவலகங்களில் பணிபுரியும் இஸ்லாமிய பெண்கள், ‘துஹ்ர்’ மற்றும் ‘அஸ்சர்’ தொழுகைகளை கடைபிடிக்காமல் தவிர்க்க முயல்வதாக ரியாத்திலிருந்து வெளிவரும் ‘அராப் நியூஸ்’ செய்தி நாளிதழ் நடத்திய சர்வே மூலம் தெரியவந்துள்ளது.

அதற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுவது..மேக்கப்!

பெண்கள் பணிபுரியும் இடங்களில், தொழுகைக்கு முன் செய்யப்படவேண்டிய உடல் சுத்திகரிப்பு(வஸூ)க்காக மேக்கப்பைக் களையவும், தொழுகை முடிந்தபின் மேக்கப் செய்துகொள்வதற்கு போதிய இடவசதி அலுவலகங்களில் கொடுக்கப்படாததாலும், முக அழகை களையவும் மீண்டும் இட்டுக்கொள்வதற்கு நேரம் அதிகம் எடுத்துக்கொள்வதால் அலுவலக வேலைகள் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டும், பெரும்பாலான பெண்கள் தொழுகையை கடைபிடிப்பதில்லை என சர்வேயின் முடிவு தெரிவித்துள்ளது.

நீண்டதூரம் பயணம் செய்கிறவர்கள், தொழுகையை தவற விடாமல் இருப்பதற்காக , நெடுஞ்சாலையி ஓரங்களில் இருக்கும் பெட்ரோல் பங்க்குகள், சிற்றுண்டி சாலைகளோடு தொழுகைக்கான இடமும் அமைக்கப்பட வேண்டும் என்பது சௌதி சட்டம், என்பது இங்கு குறிப்பிடப் படவேண்டிய ஒன்றாகும்.

Friday, July 29, 2011

பத்மநாபஸ்வாமி கோயிலின் பாதுகாப்பில் ‘செயலிழந்த பாதுகாப்புக் கருவிகள்’...!



திருவனந்தபுரம். ஜூலை 30-
ஒரு லட்சம் கோடிக்கு ரூபாய்க்கு அதிகமான பொக்கிஷங்களை கொண்டிருக்கும் கேரள பத்மநாபஸ்வாமி  கோயிலின் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ள நான்கு மெட்டல் டிடெக்டர் கருவிகள் பழுதுபட்டிருப்பதை, கேரள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை, பத்மநாபஸ்வாமி கோயிலின் பாதுகாப்பு நடவடிக்கைகளை சோதனை செய்வதற்காக கூடுதல் டி.ஜி.பி வேணுகோபால் நாயர் சென்ற போது, மெட்டல்டிடெக்டர்கள் வேலை செய்யாது இடையிடையே நின்றுபோவதை கண்டு தெரிவித்திருக்கிறார்.

கோவிலின் நான்கு பிரதான நுழைவு வாயில்களில் வைக்கப்பட்டுள்ள நான்கு மெட்டல் டிடெக்டர்களில் 2 வேலை செய்யவில்லை. மற்ற இரண்டிலும் சிறு சிகப்பு விளக்குகள் எப்போதும் எரிந்தவண்ணம் இருக்கிறது. இதை சமீபத்தில் ஆசியா நெட் சேனல் வெளிப்படுத்தியிருந்தது.

இந்த கோவிலை கவனித்துக்கொள்வதற்கு சிறப்பு கமிட்டி ஒன்று, திருவாங்கூர் அரச குடும்பத்தின் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது.

அதிகாரிகளிடம் விசாரித்த போது மூன்று கருவிகள் வேலைசெய்து கொண்டிருந்ததாகவும். நாலாவது கருவி மட்டும் சில சமயங்களில் வேலை செய்யாமலிருப்பதாக காவல்துறையினர் கூறியதாக தெரிவித்த டி.ஜி.பி, தொலைக்காட்சியில் வெளியான செய்தியின் அடிப்படையில் தான் சோதணை செய்வதற்கு வந்ததாகவும் குறைகள் இருப்பின் அவை உடனே சரி செய்யப்படும் என நேற்று வெள்ளிக்கிழமை, நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார்.



நீதிமன்ற உத்தரவுபடி, 150 வருட பழைமை வாய்ந்த இரு பெட்டகங்கள் அடுத்த மாதம் திறக்கப்பட இருக்கிறது. அதையொட்டி கோவிலை சுற்றிலும் சுவர்களில், மிகவும் பாதுகாப்புமிக்க கண்காணிப்புக்கருவிகள் பொருத்தப்பட இருப்பதாகவும், 200க்கு மேற்பட்ட காவல்துறையினர்கள் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மதக்கலவர தடுப்புச்சட்டம்- ஜெயலலிதா எதிர்பு..!






சென்னை. ஜூலை 29-
மத்திய அரசு கொண்டுவர இருக்கும் மதக்கலவர தடுப்புச்சட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா, தேவையற்ற ஒன்று என எதிராக விமர்சனம் செய்திருக்கிறார்.

     ‘’மதக்கலவர தடுப்புச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மக்களிடையே, மத அடிப்படையில் வேறுபாடு உண்டாகும்’’ என்று கவலைப்பட்ட(?) ஜெயலலிதா  மேற்கொண்டு “மதக்கலவரத்தை மாநில அரசுகள் தடுக்க தவறிவிட்டால், மாநில அரசுகள் மீதும் எதிர்கட்சிகள் மீதும், மத்திய அரசு நேரிடையாக நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கிறது. இது மத்திய அரசு மாநில அரசுகளின் தன்னாட்சி உரிமைகளின் மீது குறுக்கிடுவதாக அமைந்துவிடும். எனவே மத்திய அரசு கொண்டுவர இருக்கும் இந்த சட்டத்தை அரசியல் கட்சிகள், பத்திரிக்கையாளர்கள், பொதுமக்கள் அணைவரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும்” என கேட்டுக்கொண்டிருக்கிறார்.



 அரசியல் லாபத்தை தேடிக்கொள்வதற்காக மக்களிடையே பகைமையை உண்டாக்கி உயிர்களை பலி கொள்ளும் மதக்கலவரங்கள் கடுமையாக வேரறுக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை, உலக ஞானத்தின் அடிமட்டத்திலிருக்கும் சாமானியன் கூட சொல்லுவான். ஆனால் மக்களின் நலனில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய, சிந்திக்க வேண்டிய தமிழக முதல்வரின் இந்த விமர்சனம் மிகவும் குழப்பமானதாகப் படுகிறது.

Thursday, July 28, 2011

மாவட்ட காவல்துறை மேலதிகாரிக்கு(DSP) இ.மெயிலில் புகார்களை தெரிவிக்கலாம்.




நெல்லை, ஜூலை 29-
மாவட்ட பொதுமக்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல்துறை மேலதிகாரிக்கு ( DSP ) தெரிவிக்க, வாரந்தோறும் திங்கள் கிழமை அன்று சிறப்புக்கூட்டங்கள் நடத்தப்பட்டுவருகிறது.

ஆனால்,வெளியூர் மற்றும் வெளிநாட்டிலிருப்பவர்கள் அவர்களின் குறைகளை மாவட்ட காவல்துறை மேலதிக்காரிக்கு தெரிவிக்க, மாவட்ட காவல்துறை மேலதிகாரியின் அலுவலகத்திற்க்கு சிரமம் எடுத்து வரவேண்டிய அவசியம்
 இருக்கிறது.





இதற்காக  இணையதளத்தில் வசதி தரப்பட்டுள்ளது. இது ஏற்கனவே நடைமுறையிலிருக்கும் வசதியென்றாலும் பலருக்கு இது தெரியவில்லை. 
 http://www.tnpolice.gov.in/mailcomplaint.php
என்ற முகவரிக்கு நீங்கள் உங்களது புகார்களை பதிவு செய்யலாம்.



மேற்கொண்டு தேவைப்படும் தகவல்களுக்கு இந்த தொடர்பை கிளிக் செய்யவும்.

ராஜபக்சவை தண்டிக்க கோரி கையெழுத்து இயக்கம்! நடிகர் விஜய் கையெழுத்துப் போட மறுப்பு!




சென்னை. ஜூலை 28-
இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்ச கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கையொப்ப இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சி 12.07.2011 அன்று சென்னையில் தொடங்கியது.

இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

25.07.2011 அன்று திரைத்துறையை சார்ந்த சத்தியராஜ், மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, ரோஜா, அறிவுமதி உள்ளிட்ட பலரிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர்.

இதேபோல் நடிகர் விஜய் ஈழத் தமிழர்களைப் பற்றி பேசி வருவதால், அவரிடம் கையெழுத்து வாங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் முடிவு செய்தனர்.




சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு இடத்தில் இயக்குநர் சங்கர் இயக்கிவரும் நண்பன் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் இருந்துள்ளார்.

படப்பிடிப்பு முடிந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த விஜய்யிடம், கையெழுத்து போடும்படி கேட்டனர். இதற்கு நடிகர் விஜய் கையெழுத்து போட மறுத்துவிட்டார்.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு கூறியதாவது,



நடிகர் விஜய் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி கையெழுத்து போட மறுத்துவிட்டார்.

இதையடுத்து விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரை தொடர்பு கொண்டபோது அவர் கூறுகையில்,

உங்களைப் போலவே நாங்களும் ஒரு அமைப்பு வைத்திருக்கிறோம். உங்களுக்கு கையெழுத்து போட வேண்டிய அவசியம் இல்லை. படப்பிடிப்புக்கு தொந்தரவு கொடுக்காமல் அந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் என்றார்.

ராஜபக்ச கொலைக் குற்றவாளி என்பதற்காகத்தான் இந்த கையெழுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். வேறு எந்த காரணத்துக்காகவும் இல்லை என்று நாங்கள் எடுத்துக் கூறினோம். இருப்பினும் அவர்கள் கையெழுத்து போட மறுத்துவிட்டனர் என்றார்.

மேலும் பேசிய வன்னியரசு, ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதைப் போல விஜய் மக்களை ஏமாற்றி வருகிறார் என்று கூறினார்.

விஜய் கையெழுத்துப் போட மறுத்திருப்பது உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நன்றி- தமிழ்வின்.கம் (செய்தி மற்றும் புகைப்படங்கள்)

மேற்கண்ட செய்தி தொடர்பாக நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள், இலங்கையைச் சேர்ந்த லங்காஸ்ரீ வானொலிக்கு வழங்கிய பேட்டியின் பதிவை கீழே கேட்டறியலாம்.




Wednesday, July 27, 2011

நார்வே தாக்குதல்....நடந்தது என்ன?



ஜூலை27-
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் கடந்த 22ஆம் தேதி, அந்நாட்டு பிரதமர் அலுவலகத்தில் குண்டு வெடித்தது. அதை தொடர்ந்து 2மணி நேரத்திற்குள் ஒஸ்லோவின் அருகே உடொயா என்ற இந்த சிறு தீவில் இளைஞர்களுக்கான தொழிற்கட்சியின் கோடை முகாம் நடந்து கொண்டிருந்த வேளையில், போலிஸ்காரர் போல சீருடை அணிந்திருந்த நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார்.

ஒஸ்லோவின் மையப் பகுதியில் குறைந்தது 7 பேரை பலிகொண்ட ஒரு குண்டுத் தாக்குதலின் பின்னர் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.
சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது. குண்டுவெடிப்பில் 7 பேரும், மர்ம நபரின் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 85 பேரும், உயிரிழந்துள்ளனர்.
இந்த இரு சம்பவங்கள் 32 வயதுடைய அண்டர்ஸ் பெஹ்ரின் ப்ரெய்விக் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டுக்குள் நார்வே காவல்துறையினர் சோதனையும் நடத்தியுள்ளனர்.


இதை தொடர்ந்து அவனிடம் நடத்திய விசாரணையின் ஆரம்பத்தில், இச்சம்பவத்தில் யாருக்கும் தொடர்பில்லை. தான் மட்டுமே இந்த தாக்குதல்களில் ஈடுபட்டதாக அவன் கூறி வந்தான். பிரதமரை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவித்திருக்கிறான்.

இவனுடைய பேஸ்புக்கை ஆராய்ந்து பார்த்தபோது, ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்கங்களில் அவனுடைய தீவிரவாத கருத்துக்களையும், உலகில் தீவிரவாத போக்குடையோரைப் பற்றிய தகவல்களையும் பதிந்துவந்துள்ளது அறியப்பட்டது.

பிரெவிக் பற்றிய இணையப் பதிவுகளைப் பார்க்கும்போது அவர் தீவிர வலதுசாரி மற்றும் முஸ்லிம் எதிர்ப்புக் கொள்கைகளை உடையவர் என்று குறிப்புணர்த்துவதாக நார்வே காவல்துறையினர் கூறுகின்றனர்.

ஃபேஸ்புக்கில் அவர் தன்னைப் பற்றி எழுதுகையில் தன்னை ஒரு கிறிஸ்தவர் என்றும் மரபு பேணுபவர் என்றும் அவர் வருணித்துள்ளார். ஆனால் இது உண்மையான் கிறிஸ்தவத்திற்க்கு எதிரான கொள்கை என்றும், கிறிஸ்துவை உண்மையாக நம்புகிறவர்கள் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என பல கிறிஸ்தவ அமைப்புகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து இருக்கின்றன.

பிரெவிக் ஒஸ்லோவில் வளர்ந்து, பின்னர் நகரத்திலிருந்து வெளியேறி பிரெவிக் ஜியோபார்ம் என்ற ஒரு விவசாய நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார்.



காய்கறிகள் பயிர் செய்வதற்காக தொடங்கப்பட்ட அந்த நிறுவனத்துக்காக பெருமளவில் வாங்கப்பட்ட  உரங்களை அடிப்படையாக கொண்டு அவர் குண்டு தயாரித்துள்ளார் என்று நார்வே ஊடகங்கள் ஊகம் தெரிவிக்கின்றன.

இவர் சில வருடங்கள் முன்புதான் வலது சாரி தீவிரவாதக் கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டிருந்தாரென்று இவரது நண்பர் ஒருவர் கூறுவதாக வெர்டென்ஸ் கங் என்ற நார்வே செய்தித்தாள் தெரிவிக்கிறது.

கருத்து பரிமாறுவதற்கான இணையதளங்களில் இவர் வலிமையான தேசியவாதக் கருத்துகளைக் கூறிவந்துள்ளார் என்றும் அப்பத்திரிகை கூறுகிறது.

தொடக்கத்தில் இந்த 2 தாக்குதல்களிலும் தனக்கு மட்டுமே பங்கு இருப்பதாக கூறி வந்த அவன் இதில் மேலும் 2 தீவிரவாதிகள் உடந்தை என்று தெரிவித்தான்.

இதில் மிகமுக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், தீவிரவாத போக்குள்ளவர்கள் அதற்கு காரணமாக இருப்பவர்களைத்தான் பலிகடா ஆக்குவார்கள், ஆனால் இந்த மனிதன் பிறர் மீதுள்ள ஆத்திரத்தில் தன் இனத்தின் மீதே கோபத்தைக் காட்டியிருக்கிறான். (வடிவேலு ஸ்டைல் எங்கெல்லாம் பரவியிருக்கப்பா....!)

நடந்த தாக்குதல்கள் 'கொடூர கனவுபோல இருக்கிறது' என நோர்வே பிரதமர் ஜென் ஸ்டொல்டன்பர்க் கூறியுள்ளார்.

ஒஸ்லோவில் நடந்த குண்டுவெடிப்பில் பிரதமரின் அலுவலகமும் சேதமடைந்திருந்தது. இவ்வெடிப்பில் கொல்லப்பட்டவர்களில் அரசாங்க அதிகாரிகளும் அடங்குவர்.

அவனை 8 வாரங்கள் காவல்துறையின் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். முதல் 4 வாரங்கள் சிறையில் அடைத்து வைத்திருக்குமாறும்
விசாரணையின் போது அவனுக்கு வெளி உலகில் இருந்து எந்தவிதமான தகவல் தொடர்பும் இருக்ககூடாது என்றும் தனது உத்தரவில் அறிவுறுத்தி உள்ளார்.

அண்டர்ஸ் பெஹ்ரின் ப்ரெய்விக் தன் கருத்துக்களை பதித்துவந்த ஃபேஸ்புக்கை யாரோ ‘ஆட்டய’( hack)போட்டுவிட்டார்கள் என்பது சூடான செய்தி.

Tuesday, July 26, 2011

தண்ணீர் தொட்டிக்குள் 27வயது பெண் சடலம்...!

புதுடெல்லி,ஜூலை26,2011-
மேற்க்கு டெல்லியில், வீட்டின் மேலுள்ள தண்ணீர் டாங்கியில், அழுகிய நிலையில், 27 வயதான நேபாளி இளம் பெண்ணின் சடலம்.

டெல்லி, பாபா ஹரிதாஷ் நகரில் உள்ள ஒரு வீட்டின் மேல் கூரையில் இருந்த தண்ணீர் டாங்கியில், ஆஷா எனும் பெயர் கொண்ட இந்த நேபாளி பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதே வீட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இவர் வசித்து வந்ததாக டெல்லி காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

இது ஒரு கொலையாக இருக்கக்கூடும் என்றும், கொலைக்கு முன் கற்பழிப்பு சம்பந்தமாக ஏதும் நிகழ்ந்திருக்கவில்லை, ஆனாலும் மருத்துவ பரிசோதனைக்காக காத்திருப்பதாக அந்த காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

எதோ அழுகிய வாடை வருவதாக பக்கத்து வீட்டுக்காரர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் பரிசோதித்துப் பார்த்தபோது இந்த சடலத்தை கண்டிருக்கிறார்கள்.

"Money talks and Yeddy (எடியூரப்பா) walks.."காங்கிரஸ் கிண்டல்.

நியுடெல்லி, ஜூன் 26-
மற்றவர்கள் மீது குறைகண்டுபிடித்து போராட்டம் நடத்தும் பாஜக, கர்நாடக முதன்மந்திரி பி.எஸ்.எடியூரப்பாவின் மீது எந்தவித கட்சி நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப்பார்த்து வருவதைப் பற்றி காங்கிரஸ் கூறும் போது,  “சட்டவிரோத சுரங்க ஊழலில் கிடைத்த வரும்படி, பாஜகா-வின் மேலிடம் வரை போய் இருக்கிறது” என விமரிசித்திருக்கிறது.

“ ஊழலின் ஊற்று எடியூரப்பா என்பது கூட முக்கியமில்லை, அவர் இன்னமும் எப்படி பதவியில் உட்கார்ந்திருக்கிறார் என்பது தான் கேள்வி. சட்டவிரோதமாக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மூலம் கிடைத்த வருமானம், பாஜகா-வின் மேலிடத்திற்க்கு பகிர்ந்தளிக்கப் பட்டிருப்பதாகபடுகிறது. எடியார் நடக்க- பணம் பேசுகிறது....!,” என்று காங்கிரஸ் பிரதிநிதி மனிஷ் திவரி கூறியுள்ளார்.

காங்கிரஸ் இப்படி கூறியிருப்பதன் காரணம், திங்கள் அன்று, முன்னால் தொலைதொடர்பு அமைச்சர் ராசா, மன்மோகன் சிங் மற்றும் சிதம்பரத்தின் ஒப்புதலோடு 2ஜி அலைவரிசை பரிவர்த்தணை நடைப்பெற்றதாக வெளியிட்ட அறிக்கையை காரணம் காட்டி, பிரதமரையும் சிதம்பரத்தையும் பதவி விலகும்படி எதிர்கட்சியினர் கூறியிருந்ததே ஆகும்.

“வழக்கில் யாரையும் மாட்டிவிடும் எண்ணம் எனக்கில்லை” ராசா பேட்டி.

நியுடெல்லி, ஜூன் 26-நீதிமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரத்தை வழக்கில் இழுத்துள்ள முன்னால் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ராசா, தான் வேண்டுமென்று அவர்களை இழுக்கவில்லை என இன்று செவ்வாய் கிழமை அன்று நடந்த நிருபர்கள் கூட்டத்தில் கூறியிருக்கிறார்.

சிபிஐ-யின் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி தலைமையில் நடைப்பெற்றுவரும் நீதி விசாரணையில், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரத்தின் பெயர்களும் எடுக்கப்பட்டதால், அது குறித்து ராசாவின் வழக்கறிஞர், “எனக்கு யாரையும் மாட்டிவிடும் எண்ணம் கிடையாது” என்று ராசாவின் சார்பாக கூறியுள்ளார்.

மேலும், “பத்திரிக்கைகள் ராசாவின் வாக்குமூலத்தை திரித்து வெளியாக்கி உள்ளன” என்றும் கூறியுள்ளார்.

நேற்று திங்கள் அன்று நடந்த விவாதத்தில் 2ஜி அலைவரிசை, பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னிலையில் அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரத்தால் அங்கீகரிக்கப்பட்டே பரிவர்த்தணை செய்யப்பட்டது என்று ராசாவின் வழக்கறிஞர் சுஷில் குமார் கூறியிருந்தார்.

நீதிபதியிடம் கோபப்பட்ட ராசாவின் வழக்கறிஞர்.

நியுடெல்லி, ஜூன் 26-2ஜி ஊழல் வழக்கு விசாரணையை மிகவும் தாமதமாக நடத்துவதாக அவ்வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஓ.பி.சைனியிடம், இவ்வழக்கில்  ஆ.ராசாவின் சார்பாக வாதாடிவரும் வழக்கறிஞர் சுஷில் குமார் கோபித்துக்கொண்டார்.

2ஜி வழக்கு சிபிஐ-யின் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இன்று இரண்டாவது நாள் நடைபெற்ற வழக்கின் போது, முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவின் சார்பாக வாதாடிவரும் வழக்கறிஞர் சுசீல்குமார், நீதிபதி ஓ.பி.சைனி மீது கோபமடைந்ததால் நீதிமன்றத்தில் பரபரப்பு காணப்பட்டது.

அவர் இன்று நீதிபதியை பார்த்து," நீங்கள் இந்த வழக்குக்காக மட்டுமே ஊதியம் பெறுகிறீர்கள். நான் வேறு பல வழக்குகளுக்காகவும் செல்ல வேண்டி உள்ளது.
நான் தினமும் உங்கள் முன் வந்து உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டுமா? இது மிகவும் நியாயமற்ற விசாரணையாக உள்ளது.”
 மேலும்,  “ஆவணங்களை ஆய்வுசெய்ய மட்டும் 6 மாதம் எடுத்துக்கொண்டுள்ளீர்கள்" என்று கூறினார்.

இதைக்கேட்ட நீதிபதி சைனி அதிர்ச்சியடைந்தார்.

Monday, July 25, 2011

பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் சிதம்பரத்திற்கும் ‘செக்’ வைத்தார் ராசா.




2ஜி அலைவரிசை விவகாரத்தில் மாட்டப்பட்ட முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா விவகாரம், இப்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

இதுவரை அமைதியாக இருந்த அவரின், தற்போதைய வாக்குமூலங்கள் காங்கிரஸ் கட்சியினரை சிறிது கலக்கத்தில் மூழ்கடிக்க ஆரம்பித்துவிட்டது.

2ஜி அலைவரிசை ஏலம் விடுவதில் ராசா ஊழல் புரிந்தார் என்ற குற்றச்சாட்டின் மீது அவர் சிறையில் அடைக்கப்பட்டு, சிபிஐ-யின் விசாரணை பிடியில் இருந்துவருகிறார்.

இப்போது நிலைமை தலைகீழாக மாற ஆரம்பித்துள்ளது. அவர் மீது பிரச்சனையை ஆரம்பித்து வைத்த ஓவர் ஸ்மார்ட் சுப்பிரமணிய சுவாமி தலையை சொறியும் நிலை உண்டாகும் படி, நீதிமன்றத்தில் ராசா தகுந்த பதிலடி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்.



ராசாவின் அளித்துள்ள விவரங்கள் படி,
ராசா ஊழல் செய்துவிட்டார் என்று புகார் கூறும்படி அவர் ஏதும் செய்திருக்கவில்லை. மாறாக பாஜக ஆட்சியில் தொலை தொடர்பு அமைச்சராக இருந்த அருண் ஷோரி எந்த விதிமுறையை பின் பற்றினாரோ அதே முறையில் தான் ராசாவும் 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டையும் செய்திருக்கிறார். எனவே ராசா தவறு செய்யவில்லை. (2ஜி அலைவரிசையை ஏலத்தில் இட வேண்டாமெனும் தீர்மாணத்தை கொண்டுவந்து அப்போது ஆட்சியில் இருந்த பாஜக கூட்டணி.)

எனவே இந்த முறை 1993-லிருந்தே நடைமுறையில் இருந்துவரும் முறைதான். இந்த முறையில் முன்னால் தொலைதொடர்புத்துறை அமைச்சர் செயல்பட்டது தவறு என்றால் அந்த முறையை நடைமுறைபடுத்திய பாஜக வினரும் சிறையில் அடைக்கப்படவேண்டியவர்கள் தான்.
டி.பி ரியாலிடி, யுனிடெக் நிறுவனங்களின் பங்குகள் நடைமுறையிலிருந்த சட்டத்திற்கேற்ப விற்கப்பட்டவை. யுனிடெக்-ன் பங்குகளை நார்வேயைச் சேர்ந்த டெலிநார் (தற்போதைய யுனிநார்) சட்டப்படியே வாங்கியிருக்கிறது.

பாகிஸ்தானின் ஐஸ்ஐ-ன் செல்வாக்கு கொண்டதாக சுப்ரமணியசாமியால் வர்ணிக்கப்பட்ட அரபு நாட்டு எடிசலாட்  நிறுவனத்திற்கு, டி.பி ரியாலிடி-ன் பங்குகள், அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் ஒப்புதலின் பேரிலேயே விற்கப்பட்டன.
இது பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னிலையில் செய்யப்பட்ட ஒப்புதல்.(ஆனால் பழி எல்லாம் ராசாவின் மீது....!)

பாஜக ஆட்சியின் போது ஏற்படுத்தப்பட்ட கொள்கைப்படி,  உரிமங்களை ஏலத்தில் விடாமல், முதலில் வருபவர்களுக்கு முதல் உரிமை என்ற அடிப்படையில், முன்பு தொலைதொடர்புத்துறை அமைச்சர்களாக இருந்த அருண் ஷோரி 26 உரிமங்களையும், அடுத்து தயாநிதி மாறன் 25 உரிமங்களையும் விற்றிருக்கின்றனர். அவர்கள் கடைபிடித்த அதே கொள்கையை பின்பற்றி ராசா 122 உரிமங்களை விற்றிருக்கிறார்.

தான் சட்டத்தை மீறி எந்த காரியத்தையும் செய்யவில்லை என்று ராசா கூறுவதில் சட்டப்படி நியாயம் இருப்பதாக இருந்தாலும், அதிக விலையுள்ள உரிமங்களை மிகக்குறைந்த விலைக்கு ராசா விற்றுவிட்டார் என்பது சிபிஐ-யின் வாதம்.

இந்த வில்லங்கமான வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங்கையும், சிதம்பரத்தையும், ராசா வசமாக மாட்டியுள்ளதால், போகிற போக்கில் ராசாவுக்கு சாதகமாக ஏதேனும் நல்ல மாற்றங்கள் வர உள்ளதா? அல்லது எதிர் கட்சிகளில் மன்மோகன் சிங்குக்கும் சிதம்பரத்திற்கும் ஆப்புகளை தயார் செய்யும் முயற்சியில் ஈடுபடுமா என பொருத்திருந்து பார்ப்போம்.

Friday, July 22, 2011

ஊட்டியில் சிங்கள ராணுவத்திற்க்கு பயிற்சி ரத்து.!



இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை, ஈவு இரக்கம் இன்றி படுகொலை செய்த, சிங்கள ராணுவத்திற்க்கு மேலும் பயிற்சி கொடுப்பதற்காக, இந்திய அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த பயிற்சி ஊட்டி வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கழகத்தில் நடப்பதாக இருந்தது. இந்த ராணுவப்பயிற்சி திட்டத்திற்கு சீமான், வைகோ போன்றோர் காட்டிய எதிர்ப்பு காரணமாக பயிற்சி நிறுத்தப் பட்டிருக்கிறது.

சிங்கள ராணுவ அதிகாரிகளுக்கு, இந்திய அரசாங்கம் ராணுவப்பயிற்சி அளிப்பதை எதிர்த்து தமிழர் விடுதலை கழகத்தினர் நடத்திய போராட்டத்தின் போது, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அண்டனி யின் உருவ பொம்மைக்கு தீ வைக்க முயன்றனர்.



அதை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், 20 தமிழர் விடுதலை கழகத்தினரை கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

தமிழ் அமைப்புகள் காட்டிய எதிர்ப்பின் காரணமாக, ஊட்டியில் சிங்கள ராணுவ அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட இருந்த பயிற்சி ரத்து செய்யப்பட்டு, மைசூருக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

இந்திய மண்ணில் சிங்கள ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் திரு. அர்ஜூன் சம்பத். இந்திய ஜனாதிபதிக்கு தந்தி அனுப்பும் படி மக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இலங்கையில் சிங்கள இனவெறி ராணுவம் நிராயுதபாணியாக இருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மீது திட்டமிட்டுக் கனரக ஆயுதங்களையும்  குண்டுகளையும் வீசி, விமானத்தைக் கொண்டு தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தி பல ஆயிரக்கணக்கான மக்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்துள்ளது என்றும், அது கடுமையான போர்க் குற்றம் என்றும் ஐ.நா.வின் நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது.

ஆனால், சமீபத்தில் இந்தியாவுக்கு வருகை தந்த ஹிலாரி கிளிண்டனிடம், இந்திய அரசாங்கம் இலங்கையில் நடந்த இனவெறிதாக்குதல் பற்றி பேசியதாக அரசு தரப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இலங்கைத் தமிழர்களின் அவல நிலை குறித்து ஹிலாரி கிளிண்டனிடம் எதுவும் பேசவில்லை. அமெரிக்கரான ஒபாமாவுக்கு, இலங்கைத் தமிழர்கள் மீது உள்ள மனிதாபிமான இரக்கம் கூட ஜெயலலிதாவிடம் காணக்கிடைக்காதது தமிழர்களாகிய நமது துர்பாக்கியம்.

சமீபத்தில், ராஜபக்சே வெளிப்படையாக கூறிய ஒரு முக்கியமான வார்த்தை ஒன்றை திரும்பவும் இப்போது நினைவு கூர்ந்தால், இந்திரா காங்கிரஸின் நிலைப்பாடு என்னவென்று தமிழக மக்களுக்குப் புரியும்.

“இலங்கையில் போர் நிறுத்தம் பற்றி எங்களிடம் இந்தியா எதுவும் கூறவில்லை!” என்பது தான். இதிலிருந்து இந்திரா காங்கிரஸின் கபட நாடகம் தெளிவாகிறது.


மும்பை குண்டுவெடிப்பு கோர புகைப்படங்களை விற்பனை செய்யும் ஈனர்கள்..!



மும்பை. ஜூலை 22:
மும்பையில் குண்டுவெடிப்பு தீவிரவாதிகளால் நடத்தப்பட்டபோது, அந்த தாக்குதலில் காயமுற்றோர், கை கால்களில் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு உயிருக்குப்போராடி, உதவி கோட்டு அலறிகொண்டிருந்த போது,  அங்கிருந்த மும்பைவாசிகளில் பெரும்பலோர், உதவி கோட்டு அலறிக்கொண்டிருந்தவர்களுக்கு உதவ முன் வராமல் படம் எடுப்பதிலேயே குறியாக இருந்ததாக மும்பையிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளீதழில் செய்தி வந்திருந்தது.

அதற்கு முத்தாய்ப்பாக ஒரு இணையதளத்தில் மும்பை கோரமான சோக சம்பவத்தில் வேதனைப்பட்டுக்கொண்டிருப்பவர்களை படம் பிடித்து விற்பனைச் செய்யும் ஈனத்தனமான விளம்பரக்குறிப்பும் காணக்கிடைக்கிறது.



அன்னை தெரெஸா வாழ்ந்த பூமியில் இப்படியும் சில இந்தியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மும்பை வெடிகுண்டு வெடிப்பில் பிடிபட்டவனுக்கு 18 ஊர்களில் வங்கி கணக்கு!



மும்பை- ஜூலை 22-
மும்பை தொடர்வெடிகுண்டு நாசவேலை சம்பந்தமாக பிடிபட்டிருக்கும், பிரதான சந்தேகத்துக்குரிய நபரான ரியஸுல்-ஐப் பற்றி சில முக்கிய விபரங்கள், விசாரணையின் போது வெளிவந்திருக்கின்றன.

பீகார் மாநிலம் கிஷான்கன்ஞில் பிடிபட்ட, ரியாஸுல் என அழைக்கப்படும் இவனின் மற்றொரு பெயர் ஆகாஷ் கான். இந்தியாவில் 18 நகரங்களில் இவனுக்கு வங்கிக்கணக்கு உள்ளது.

இவனிடமிருந்து, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் செண்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா- வங்கிகளின் ATM அட்டைகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், அவன் கைப்பேசி மூலம் யாரொடெல்லாம் தொடர்பு கொண்டிருந்தான் என்பதையும் சோதித்துப் பார்த்தனர். அதில், நேபாளம், பாகிஸ்தான், பங்ளாதேஷ், கிஷான்கன்ஞ் மற்றும் பாட்னா முதலான இடங்களில் உள்ள நபர்களோடு அவன் தொடர்பு கொண்டது தெரியவந்துள்ளது.

விசாரணையின் போது அவனிடமிருந்து நான்கு கைப்பேசி மற்றும் கூடுதலாக இரு சிம்கார்ட்களையும் காவல்துறையினர் கைப்பற்றியிருக்கிறார்கள்.

ரியாஸுல்-ன் சொந்த ஊர் பாங்ளாதேஷில் டாக்காவில் உள்ள மலெகான் கிராமமாகும். ஆனால் அவன் சகோதரன் மற்றும் தாயார் மேற்கு வங்காளத்திலுள்ள தெற்க்கு தினஜ்புரில் இருக்கிறார்கள். ரியாஸுல் 2000-ல் பங்ளாதேசத்திலிருந்து இந்தியாவுக்குள் வந்துவிட்டதாக அவனை விசாரித்துவரும் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, குஜராத், ஸ்ரீநகர், டெல்லி, கொல்கதா மற்றும் கர்நாடக மாநிலத்திலும் தங்கியிருந்திருக்கிறான். இரு மாதங்களுக்கு முன்னர் மேற்குவங்காளத்திலுள்ள சிலிகுரிக்கு போய்விட்டு தற்போது அவன் தங்கியிருந்த இடமான கிஷான்கன்ஞிலுள்ள  பௌகாலி கிராமத்திற்க்கு வந்திருக்கிறான்.

கிஷான்கன்ஞில் முக்கியமான தகவல்களை சேகரித்த விசாரணை அதிகாரிகள் டெல்லி திரும்பியிருக்கிறார்கள். மும்பை நாசவேலையில் சம்பந்தப்பட்ட சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகளோடு ரியாஸுல் புகைப்படம் ஒத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

30 ஆண்டுகளாக விண்வெளிக்குச் சென்று வந்த அட்லாண்டிஸின் ஓட்டம் முடிவுக்கு வந்தது.




நியுயார்க். ஜூலை 22-
அட்லாண்டிஸ் விண்வெளி ஓடத்தின் இறுதிப் பயணத்துடன் கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் அமெரிக்காவின் விண் ஓடத் திட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்த விண் ஒடங்கள் மனிதர்கள் பூமி குறித்தும் பிரபஞ்சம் குறித்தும் வைத்திருந்த புரிதல்களை மாற்றியதாக அடலாண்டிஸ் கமாண்டர் கிரஸ் பெர்குசன் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் மொத்தம் ஐந்து விண்வெளி ஓடங்கள் தயாரிக்கப்பட்டன. இவை நூற்றுக்கணக்கான செயற்கைக் கோள்களையும் ஹப்பில் தொலைநோக்கியையும் ஏவ உதவின

முதல் முதலாக அமெரிக்க 1983 ஆம் ஆண்டு சேலன்சர் என்ற விண்வெளி ஓடத்தை ஏவியது. அதுவரை விண்வெளி வீரர்களும் - செயற்கைக்கோள்களும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய ராக்கெட் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டனர். விண்வெளி ஓடத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும் என்பது இதன் தனிச் சிறப்பு.

இதுவரை விண்வெளி ஓடங்கள் மூலமாக 135 விண்வெளிப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. கலிபோர்னியா மற்றும் ப்ளோரிடா தளங்களில் 133 முறை தரையிறங்கியிருக்கிறது. இப்போது இறங்குவது இதன் கடைசி இறக்கம்.

அதேநேரம் விண்வெளியில் இரண்டு விண்வெளி ஓடங்கள் வெடித்துச் சிதறியதால், இந்தியாவில் பிறந்த கல்பனா சாவ்லா உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர்.

மொத்தம் உற்பத்தி செய்யப்பட்ட 5 விண்வெளி ஓடங்களில் மற்ற இரண்டு ஏற்கனவே அருங்காட்சியகங்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டன. அட்லாண்டிஸ் விண்கலமும் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும்.



அதேநேரம் விண்வெளி ஓடத்துக்கு ஓய்வு கொடுக்கப்படுவதால் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி தடைபடாது என்று நாசா உறுதி கூறுகிறது.

ஆனால் அமெரிக்காவில் தனியார் துறையினரால் செய்யப்படும் ராக்கெட்டுகள் பயன்பாட்டுக்கு வரும் வரை ரஷ்யாவின் சோயஸ் ராக்கெட்டுக்கள் மூலமாகவே அமெரிக்காவின் விண்வெளிப் பயணங்கள் நடைபெறும்.

இந்த விண்வெளி ஓடத்தின் திட்டம் முடிவுக்கு வந்தாலும், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்களை மேற்கொண்டு நடத்திச் செல்லுவதில் அரசியல் யுத்தம் ஆரம்பித்துள்ளது. அதன் காரணமாகவே, இனி விண்வெளிக்குப்போக, ரஷ்யாவின் சோயஸ் ராக்கெட், 63 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாடகைக்கு எடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த திட்டம் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவின் 4 ஆயிரம்கணக்கான திறமை மிகுந்த ஊழியர்கள் பதவியிழப்பார்கள்.



ஊட்டியில் சிங்கள ராணுவ படையினருக்குப் பயிற்சி!




சென்னை. ஜூலை 22-
நீலகிரி மாவட்டம், ஊட்டியிலுள்ள வெலிங்டன் இராணுவப் பயிற்சி்க் கழகத்தில் சிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 படையினருக்கு பயிற்சி அளிக்கப்படுவதை கண்டித்தும், அதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி மறியல் போராட்டம் நடத்தப்போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிக்கை:

நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அருகே வெலிங்டனில் அமைந்துள்ள இந்திய இராணுவ பயிற்சிக் கழகத்தில் சிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 படையினருக்கு பயிற்சியளிப்பதாக உறுதியான செய்திகள் வந்துள்ளது. இந்திய இராணுவம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை தமிழர்களை அவமதிப்பதாகும்.




இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் நிராயுதபாணியாக இருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மீது திட்டமிட்டுக் கனரக ஆயுதங்களையும் பயன்படுத்திக் குண்டுகள் வீசியும், விமானத்தைக் கொண்டு தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியும் பல பத்தாயிரக்கணக்கான மக்களை சிங்கள இராணுவம் கொன்று குவித்துள்ளது என்றும், அது கடுமையான போர்க் குற்றம் என்றும் ஐ.நா.வின் நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது.

அதன் அடிப்படையில் உலக நாடுகள் அனைத்தும் இலங்கை அரசுக்கு எதிராக போர்க் குற்ற விசாரணை நடத்தவேண்டும் என்று கோரிவரும் நிலையில், அந்நாட்டுப் படையினருக்கு இந்திய இராணுவம் பயிற்சி அளிக்கிறது என்றால், சிங்களப் படைகள் அப்படி எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று இந்திய அரசு கூறுகிறதா?
ஒரு சாவுக்கு இத்தனை பலிகளா?



குற்றமற்ற இலங்கை தமிழர்கள் மீது தாக்குதல்.



தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் கால் நூற்றாண்டிற்கும் மேலாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி 543 மீனவர்களைக் கொன்ற இலங்கை அரசின் படைகளுக்கு பயிற்சி அளிக்க இந்திய இராணுவம் முற்பட்டுள்ளது என்றால், அதற்குப் பொருள் என்ன? மீனவர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இந்த தேசத்திற்கும், ‘இறையாண்மைக்கும்’ விடப்பட்ட சவால் அல்லவா? அந்நாட்டு கடற்படையின் நடவடிக்கைகளை நியாயமானது என்று இந்திய அரசும், இராணுவமும் கருதுகின்றனவா? இல்லை, இதுவரை சுட்டது சரியில்லை,

எங்களிடம் பயிற்சிப் பெற்றுச் சென்று, ஈழத் தமிழினத்தை அழித்ததுபோல், தமிழக மீனவர்களையும் கொத்துக் கொத்தாக கொன்று குவியுங்கள் என்று பயிற்சியளிக்கிறதா? இப்படி கூப்பிட்டுப் பயிற்சி கொடுப்பது ஏன்?தமிழக மீனவனை சிங்கள கடற்படை அழிப்பதை கண்டுகொள்ளாமல் இராணுவ உறவு பேணும் இந்திய அரசு, இதேபோல் இந்தியாவின் நகரங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் வருவதற்கு காரணமாக அது கருதும் பாகிஸ்தான் இராணுவத்தினருக்கும் இந்திய மண்ணில் பயிற்சி அளிக்குமா?

சிங்கள இனவெறி இராணுவத்தினருக்குப் பயிற்சி கொடுப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது? அவர்களுக்கு அண்டை நாடாக இருக்கக் கூடியது இந்தியா மட்டும்தான். அப்படியிருக்க அந்நாட்டு இராணுவத்திற்கு ஒப்பந்தம் போட்டு பயிற்சியளிக்க என்ன அவசியம் உள்ளது? ஈழத் தமிழினத்தை கொன்று குவித்தது போதாது, எதிர்காலத்திலும் அதற்கு அவசியம் ஏற்படும், அப்போதும் கொன்று குவிக்கத் தயாராகுங்கள் என்பதற்காக இந்திய இராணுவம் பயிற்சியளிக்கிறதா? ஈழத் தமிழினத்தை அழிப்பதற்குத் துணைபோன இந்திய அரசும், இராணுவமும், எதிர்காலத்திலும் அப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்கு துணை நிற்கும் என்பதற்கான அத்தாட்சியா இந்தப் பயிற்சித் திட்டம்?




இலங்கை அரசின் மீதான போர்க் குற்றச்சாற்று மீது பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டின் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தமிழ் மண்ணிலேயே சிங்கள இனவெறி இராணுவத்தினருக்குப் பயிற்சி அளிப்பது என்றால், இது தமிழனை சீண்டிப் பார்க்கும் செயலல்லவா?



இதனை உடனடியாக இந்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் இந்திய அரசுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி பெரும் போராட்டத்தில் ஈடுபடும். ஈழத் தமிழினப் படுகொலைப் போரைத் தூண்டி விட்டதே மத்திய காங்கிரஸ் அரசுதான் என்பதற்கான ஆதாரங்கள் வெளிப்பட்டுள்ளன.

ஆதாரப்பூர்வமான அந்தக் குற்றச்சாற்றை நிரூபிப்பதுபோல் அந்நாட்டுடன் நட்புறவு கொண்டாடுகிறது இந்திய அரசு. இது தமிழ்நாட்டில் வாழும் 7 கோடித் தமிழர்களுக்கு விடப்பட்ட சவாலாகும். இதனை நாம் தமிழர் கட்சி நேரடியாக எதிர்கொள்ளும்.

இன்று மாலை நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் வெலிங்டன் இராணுவப் பயிற்சிக் கழகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். அதையும் தாண்டி பயிற்சி நீடித்தால், இந்திய அரசு கடும் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதை நாம் தமிழர் கட்சி எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறது.

போர்க்குற்ற விசாரணை நடத்தாவிடில், இலங்கைக்கான உதவிகள் ரத்து : அமெரிக்க காங்கிரஸ் அறிவிப்பு.




நியூயார்க்.ஜூலை 22-
இலங்கை அரசாங்கம் 2009 ஆம் ஆண்டு போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை தொடராவிட்டால், அந்த நாட்டுக்கான உதவிகளை நிறுத்தப் போவதாக அமெரிக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானத்தை நேற்று,அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் குழு நிறைவேற்றியுள்ளது.

இந்த தீர்மானத்தின்படி, மனிதாபிமான உதவிகளை தவிர்த்து மற்ற அனைத்து நிதியுதவிகளும் நிறுத்தப்படுவதற்கு அமெரிக்க காங்கிரஸின் வெளிநாட்டு விவகார குழு அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடாபான தீர்மானத்தை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹவாட் பேர்மன் முன்மொழிந்தார்.

இலங்கையின் போர்க்குற்றச்சாட்டு உட்பட்ட ஊடக சுதந்திரம், அவசரகால சட்ட நீக்கம், என்பனவும்; நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று காங்கிரஸின் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டின் நிதியாண்டுக்காக இலங்கைக்கு வழங்குவதற்க்கு 13 மில்லியன் டாலர்களை அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிறுவனம் அந்த நாட்டு அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

இந்தநிலையில் காங்கிரஸின் நேற்றைய தீர்மானம், உடனடியான அமுலுக்கு வராது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, July 21, 2011

தாலிபான் நடத்திய கொடூர கொலை வீடியோ காட்சி.

வடமேற்க்கு பாகிஸ்தானிலிருந்து பிடித்து வந்த, 12க்கு மேற்ப்பட்ட பாகிஸ்தானியர்களை, பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் சுட்டுக்கொன்றனர். சுடப்படும் வேளையில் பாகிஸ்தானியர்கள் கைகள் கட்டப்பட்டிருந்தன.

அவர்கள் கொல்லப்படுவதற்க்குமுன், அவர்கள் முன்னே நின்ற தாலிபான் தலைவன் ஆற்றிய உரையில், “ இவர்கள் பாகிஸ்தானிலுள்ள இஸ்லாமிய எதிரிகள். இவர்கள், போலிஸ், ராணுவத்தினர் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள். ஆறு சிறுவர்களை ஸ்வத் பகுதியில் சுட்டு தண்டனை கொடுத்தவர்கள். இந்த பாகிஸ்தானியர்கள் நமது பிடியில் இருக்கிறார்கள். இவர்கள் கொன்ற அந்த சிறுவர்களுக்காக, இவர்களை பழிவாங்க அதே முறையில் இவர்கள் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள் .” என்று உரையாற்றிய பின் இந்த பழிவாங்குதல் நடைப்பெற்றது.

லைவ் லீக் இணையதளத்தில் வெளியாகியுள்ள வீடியோக்காட்சி

Wednesday, July 20, 2011

"பாகிஸ்தானுடனான நீண்ட கால உறவு இருந்தாலும், எந்தப் பகுதியிலும் தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு அரண் வழங்குவதை பொருத்துக் கொள்ள முடியாது” ஹிலாரி கிளிண்டன்.





புதுடெல்லி ஜூலை20-
இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற வந்திருக்கும் ஹிலாரி கிளிண்ட்ன் செவ்வாய் கிழமை காலை, இந்திய வெளியுறவு அமைச்சருடன் இரு நாடுகளுக்கிடையிலான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

மும்பையில் சமீபத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின் பின்னணியில், தங்களது இன்றைய பேச்சில் தீவிரவாதம் தொடர்பான விடயம் முக்கிய இடம் பிடித்ததாக ஹிலாரி தெரிவித்துள்ளார்.

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணையில் பாகிஸ்தான் முழுமையான ஒத்துழைப்புத் தரவில்லையெனக் கூறப்படும் நிலையில், அமெரிக்கா அதுதொடர்பாக நிர்பந்தம் செய்கிறதா என்ற கேள்விக்கு ஹிலாரி பதிலளித்தார்.

இந்தியா – பாகிஸ்தான் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளை வரவேற்ற ஹிலாரி, ‘பாகிஸ்தான் முதலில் தனது பாதுகாப்புக்காகவும், தனது மக்களின் பாதுகாப்புக்காகவும் தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகிஸ்தானுடனான நீண்ட கால உறவு என்றிருந்தாலும், எந்தப் பகுதியிலும் தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு அரண் வழங்குவதை பொருத்துக் கொள்ள முடியாது என்ற பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் இருக்க வேண்டும், யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதற்காக, எந்த நாடும் தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடு்ப்பதை அனுமதிக்க முடியாது’ என்று உறுதி படக்கூறியிருக்கிறார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில், பொய் பெயரில் வேலை பார்த்த வட இந்திய மீரான்கான் பிடிபட்டான்!





கூடங்குளம், ஜூலை 20-  நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் நடந்துவரும் பலதரப்பட்ட வேலைகள், ஒப்பந்தக்காரர்கள் மூலம் செய்யப்பட்டு வருகின்றன. பெரும்பலோர் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

மும்பையில் நடந்த தொடர்வெடிகுண்டு சம்பவத்தைத் தொடர்ந்து, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்புபணிகள் பலப்படுத்தப் பட்டிருக்கின்றன. இதன் காரணமாக, இங்கு பணிபுரிவோர் அணைவரும் பரிசோதணைக்குப் பின் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

நேற்று முன் தினம், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நடத்திய பரிசோதணையில், சுபாஷ் பாஸ்வான் என்ற நபரின் ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்ட போது, அவன் உண்மையான பெயர் முகம்மது மீரான் கான் என்பதும், அவனது தந்தையின் பெயர் முகம்மது அலி ஆசாத் என்றும், அவன் உத்திரபிரதேசத்திலுள்ள ஹஜ்பூரை சேர்ந்தவன் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

முகம்மது மீரான் கான் என்ற வட இந்திய நபர், யாரும் அறியாதபடி, இத்தனை நாட்களும் போலிப்பெயரிலே வேலை செய்துவந்ததை அறிந்த கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். கானை கூடங்குளம் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

நெல்லை மாவட்ட காவல்துறை மேலதிகாரி விஜயேந்திர பிதரி, இது சம்பந்தமாக முகமது மீரான் கானை விசாரணை செய்துவருவதாக வந்துள்ள செய்தியைத் தவிர வேறு தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

முன்பும் ஒருமுறை, கூடங்குளம் அணுமின் நிலையம் இருக்கும் மலைப்பகுதியை சந்தேகத்துக்கு இடமான முறையில், சாக்குப்பையுடன் சுற்றிக்கொண்டிருந்த நபர் ஒருவன் பிடிபட்டான். விசாரணையின் போது அவன் வங்காளத்தைச் சேர்ந்தவன் என்றும், தமிழ்நாட்டுக்கு கள்ளத்தனமாக வேலைக்கு வந்தவன் வழிதெரியாமல் சுற்றிக்கொண்டிருப்பதாக, காவல்துறையினரின் விசாரணையின் போது தெரிவித்ததாக செய்தி வெளியாகி இருந்தது.

இந்த மாதிரி சந்தேகப்படும் படியான நபர்கள், தூரமான இடத்திலிருந்து இங்கேவந்து ரவுண்ட் அடிக்கும் போது, கூடங்குளத்தைச் சுற்றியிருக்கும் திருநெல்வேலிகாரர்களாகிய நமக்கு அல்லவா பகீரென அடிக்கிறது!!!

Sunday, July 17, 2011

மும்பை தாதரில் வெடி குண்டு வைத்தது யார்?



மும்பை தாதரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம், இந்திய புலனாய்வுத்துறைக்கு மிக குழப்பமான விவகாரமாக இருக்கப்போகிறது.

1.ஜுலை 13ஆம் தேதி தாதரில் குண்டுவெடிப்பதற்க்கு, இருநாட்களுக்கு முன், 2008ஆம் வருட, குஜராத் தொடர்குண்டு வெடிப்புக்குக் காரணமாக இருந்த, இந்திய முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த, ரியாஸும் அவனது கூட்டாளியும் அஹமதாபாத்தில் கைது செய்யப்பட்டனர். எனவே இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த தாதர் தொடர்வெடிகுண்டு தாக்குதலை நடத்தியிருக்கலாம்.
    ஒருவேளை இவர்கள் இந்த குண்டுவெடிப்பு வேலைகளை செய்திருக்க, இந்திய புலனாய்வுத்துறைக்கு பெரிய பிடிமானம் ஏது இருப்பதாக படாவிட்டாலும், உணவுகொடுத்த மண்ணிற்க்கும், பிறந்த- சொந்த மண்ணிற்க்கும் துரோகம் செய்துவரும், இந்த உடன் பிறவா சகோதரர்கள், இதற்க்கு முன் செய்திருக்கும் ஸ்டைல், இப்போதும் ஒத்துப்போகிறது.
   உணவு சாப்பிடும் டிபன் கேரியரில், வெடிகுண்டை மறைத்துவைத்து, அழிவை உண்டக்குவது தான் இவர்கள் ஸ்டைல். அதே முறைதான் இப்போது தாதாரிலும்
நடந்திருக்கிறது.
-எனவே இந்திய முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இதைச் செய்திருக்க வாய்ப்பிருக்கிறது.

2. அமெரிக்கா பாகிஸ்தான் உறவு சீர் கெட்டுவரும் இந்த வேளையில், இந்த   வாரம் ஹிலரி கிளிண்டன்  இந்தியா வர இருப்பதால், அது பிடிக்காமல், பாகிஸ்தானின் உளவுப்படை ஐ.ஸ்.ஐ வழக்கம் போல் அதன் சிறுபிள்ளைத்தனமான இந்த வேலையை செய்திருக்கலாம்.



3.மிகவும் யோசிக்க வேண்டிய ஒரு காரியம் நடந்திருக்கிறது.
2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பை நகருக்குள் புகுந்து வெறித்தனமாக தாக்குதல் நடத்தியதில், 25 வெளிநாட்டவர் உள்பட 166 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். 304 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அனைவரும் லஷ்கர் இ தொய்பா என்பது விசாரணையின் மூலம் தெரிய வந்தது. பத்து பேரில் 9 பேர் கொல்லப்பட்டு விட, கசாப் மட்டுமே உயிருடன் பிடிபட்ட்டான்.



 உலகம் முழுவதிலும் ஹவாலா மற்றும் போதை மருந்து கடத்தலில் முதலாவதாக இருப்பது தாவூத் இப்ராஹீமின் ‘டி-கம்பெனி’!. தான் செய்யும் குற்றச்செயல்களுக்கு புனிதமான இஸ்லாமைச் சேர்ந்தவர்களை, மததீவிரவாதிகளாக மூளைச்சலவைச் செய்து, தவறான வழியில் பயன்படுத்திவருகிறான் தாவூத். குஜராத்தில் நடைபெற்ற பயங்கர தொடர்வெடிகுண்டு தாக்குதலுக்கு மூலகாரணமாக இருந்தது பாகிஸ்தானின் லஸ்கர்-ஈ-தொய்பா இயக்கம், அதற்க்கு பண உதவி செய்தது, தாவூத் இப்ராஹீம் என்கிறார் திரு.பில்வார்னர் என அழைக்கப்படும் அமெரிக்க தனியார் துப்பறிவாளர். (இவர் எஃப் பி ஐ ய்-ன், இன்ஃப்ரா கார்ட் என்ற பிரிவில் அங்கத்தினராகவும் உள்ளார்.) மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்த கொலைவெறித்தனமான தாக்குதலுக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது தாவூது இப்ராஹிம்.
2008-ல் தாஜ்ஹோட்டல் தாக்குதலில் ஈடுபட்டது பாகிஸ்தானின் லஸ்கர்-ஈ-தொய்பா இயக்கம். அதில் உயிரோடு பிடிபட்டவன் முஹம்மத் அஜ்மல் கசாப். இவனுக்கு 2010 ஆம் வருடம் மே மாதம் 3ஆம் தேதி, பம்பாய் உயர்நீதி மன்றம் மரணத்தண்டனை விதித்தது. ( ஆனால் ஜெயிலில் இருந்து கொண்டு, இன்னமும் பிரியாணி சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறான்).







சொல்ல வந்த மூன்றாவது விசயத்தை முடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதாவது, தாதர் தொடர் வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் நடந்த தேதி தான், மரணத்தண்டனை வாங்கிக் கொண்டு இன்னமும் சாகாமல், ஜெயிலில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் முஹம்மத் அஜ்மல் கசாபின் பிறந்த நாள்!.
எனவே தாதர் வெடிகுண்டு சம்பவத்திற்க்கும், தாவூத் இப்ராஹிம்-க்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கக்கூடும்.

 உலகில் பிரசித்தமான, இண்டர்போலுக்கு அடுத்து செயல் திறனில் கூடியவர்கள், நமது இந்திய புலனாய்வுத்துறை. நிச்சயம் வெகு விரைவில் உண்மையை வெளிக்கொண்டுவந்து விடுவார்கள்.

Friday, July 15, 2011

மும்பை தொடர்-வெடிகுண்டு வீடியோ காட்சிகள்.!

மும்பை தொடர்-வெடிகுண்டு வீடியோ காட்சிகள்.!









மும்பை தொடர்-வெடிகுண்டு வீடியோ காட்சிகள்.!

Thursday, July 14, 2011

நித்யானந்தரின் தங்க சிம்மாசனத்தில், அவரின் கால்களுக்கு அலங்காரமாயிருப்பது வலப்பாகத்தில் விக்னேஸ்வரும், இடப்பாகத்தில் விஷ்ணுவும்-ல்க்ஷ்மி தேவியும்!




உலகமே கண்டு வியப்புற்ற ஸ்வாமி நித்தியானந்த பரமஹம்சரின், அந்தரங்க விசயங்களைப் பற்றி வெளியான வீடியோ காட்சிகள் பொய்யானவை என்றும்,  அவை அணைத்தும் மார்பிங்க் முறையில் உருவாக்கப் பட்டவை, எனவே அதை ஒளி பரப்பிய சன் டிவி நிறுவனம் மற்றும் நக்கீரன் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென புகார் செய்திருக்கிறார் நித்தியானந்தர். மேலும் அவரது ஆசிரமம் மற்றும் தியானபீடம் மீது நடந்த தாக்குதல் மத ரீதியானது என்றும் கூறியிருக்கிறார்.

சன் டிவி மீது பழி சுமத்தவேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் இருக்கும் இவரது ஒரே நம்பிக்கை முதல்வர் ஜெயலலிதா என்பது தெளிவாக தெரிகிறது. திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்க தயாராக இருக்கும் தமிழகமுதல்வர் ஜெயலலிதாவின் மனப்போக்கை தெளிவாக புரிந்துவைத்திருக்கும், ஸ்வாமி நித்யானந்த பரமஹம்ஸரின் புதிய ‘ஸ்மார்ட் மூவ்’ தான் இது!

  மேலும் சமீபத்தில் சென்னையில் வைத்து நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘தமிழக முதல்வர் மீதும், பத்திரிகைகள் மீதும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. புகார்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன். ஆளும் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்பேன். அழைப்பு வந்தால் சூழ்நிலைகளைப் பார்த்து முடிவு செய்வேன். முதல்வர் மீது முழு நம்பிக்கை உள்ளது.’ என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நித்தியானந்த பரமஹம்சருக்கு, தன்னை இன்னமும் நம்பிக்கொண்டிருக்கும் சீடர்கள் மீது நம்பிக்கை இருப்பது போல், கருணாநிதியின் குடும்பத்தினர் மீது, தேவைப்படும் நடவடிக்கை எடுக்கத்தயாராக இருக்கும் தமிழகமுதல்வர் மீதும் நம்பிக்கை இருக்கிறது. மூன்றாவதான மிகப் பெரிய நம்பிக்கை, மக்களை மிக எளிதில் முட்டாளாக்க முடியும் என்கிற நம்பிக்கை!

இந்த மூன்றாவது நம்பிக்கைக்குக் காரணம்,
   இவரின் அந்தரங்க செயல்பாடுகள் வெளிப்பட்டதும், தமிழகத்தில் இந்து மக்கள் முன்னணியும், கர்நாடகாவிலுள்ள இந்துமதகட்சியும் இவருக்கு எதிராக கிளம்பியதும், மிரண்டுபோன நித்தியானந்தர் செய்த முதல் காரியம், அவரைக் காட்டிக்கொடுத்த அவரது சீடரான நித்ய பிரேமானந்தா என்ற பக்கா இந்துவான லெனின் கருப்பனை, கிருஸ்தவர் என்றும், அவர் இந்துமதத்திற்க்கு புகழ் சேர்க்கும் தன்னை வேண்டுமென்றே கேவலப்படுத்துவதற்க்காக இக்காரியத்தை செய்திருப்பதாக பிரசாரம் செய்து, எந்த இந்து மக்கள் முன்னணி அவருக்கு எதிராக செயல்பட்டதோ அதை புத்திசாலித்தனமாக தன் வசப்படுத்தினார்.

 தற்போது,  தன்னை ஒரு இந்துமத ஆன்மீகவாதியாக காட்டிக்கொள்ளும் நித்தியானந்தர், இவருக்கு எதிர்ப்பு கிளம்பாதிருந்த காலத்தில் பேசிய பிரசங்களில், கல்விக்குரிய தெய்வமான சரஸ்வதியைப் பற்றிக்குறிப்பிடுகையில், அது வெறும் கற்பனை, அப்படிப்பட்ட படத்திற்க்கு மணி அடித்து பூஜை செய்வதைப்பற்றி கிண்டல் அடித்திருக்கிறார்.
 இப்போது அது பற்றி பேச்செடுத்தால், ‘அது நான் கூறியதல்ல, இந்து ஆன்மீகவாதியான என் புகழை கெடுப்பதற்க்காக யாரோ பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் செய்திருக்கும் மிமிக்ரி வேலை’யென சொன்னாலும் ஆச்சரியப்படமுடியாது. ஆனால் இந்த ஒலிநாடா நித்யானந்தரின் தியானப்பயிற்சி மற்றும் சத்சங்கம் நடக்கும் இடங்களில் அவர்களால் விற்பனை செய்யப் படுகிறது. (திருநெல்வேலி ஜங்சனில் உள்ள மதிதா இந்து மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடந்த, நித்யானந்தர் தியான பயிற்சி வகுப்பில் விற்கப்பட்ட ஒலி நாடாக்களில் இதுவும் ஒன்று.)
  காலங்காலமாக வழிபட்டு வரும் இந்துக்களின் தெய்வங்களை ஸ்வாமி நித்யானந்த பரமஹம்ஸர், கேவலப்படுத்துவது முறையா? இப்படியெல்லாம் பேசினால், வெள்ளைககாரர்கள் சந்தோசப்பட்டு காணிக்கைகளை அள்ளி வீசுவார்கள் என்பதற்க்காகவா?
 இவர் இந்த மாதிரி பேசினாலும், புரியாமல் கேட்டு வரும் இந்துக்களையும், அவர் கூடவே காவி உடையும் ருத்ராட்ச மாலையும் போட்டுக்கொண்டு திரியும் மனிதர்களையும், ஸ்வாமி நித்யானந்த பரமஹம்சர் மிக அதிகமாகவே புரிந்து வைத்திருக்கிறார்.




 உடுக்கையுடைய திரிசூலத்தை கையில் பிடித்திருக்க சிவனன்றி பிறர்யாருக்கேனும் அருகதை உண்டா? ஆனால் திரிசூலத்தை, நித்யானந்தர் கையில் பிடித்தபடி காட்சிக்கொடுக்க, மற்ற பெரியோர்கள் வாய்மூடி நிற்க காரணம் எதுவோ?

நித்யானந்தரின் தங்க சிம்மாசனத்தில், அவரின் கால்களுக்கு அலங்காரமாயிருப்பது யார் தெரியுமா? வலப்பாகத்தில் விக்னேஸ்வரும், இடப்பாகத்தில் விஷ்ணுவும்-ல்க்ஷ்மி தேவியும்!





 ஒரு நடிகையுடன் வைத்திருந்த தகாத உறவின் அவமானத்திலிருந்து, தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்க்காக, இவர் கேடயமாக பயன்படுத்துவது இந்துமதத்தை!. ஆனால் இவருக்கு பணத்தை அள்ளித்தரும் தியானமுறைகளில் பிண்ணிப்பினைந்திருப்பது சூஃபி(இஸ்லாம்), புத்தமத மற்றும் கிறிஸ்தவ முறைகளும் தான். ஒரு சுத்தமான ஹிந்து ஆன்மீகவாதி பிறமத முறைகளை தொட்டுப்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை.

எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து பார்த்தால் ஒரு விசயம் மிக தெளிவாகிறது. அது என்னவென்றால், பொன் பொருள் பெண் மீது ஆசை அறவே இல்லாத, ராம கிருஷ்ண பரமஹம்ஸரின் புனிதமான பெயரை, இளம் வயதிலேயே தன்னுடன் இணைத்துக் கொண்ட  ஸ்வாமி நித்யானந்த பரம்ஹம்சர், “யாரையும் மிக எளிதாக ஏமாற்றிவிட முடியும். குறிப்பாக, தன்னைவிட மிகப்பெரிய அறிஞர்களையும், மஹான்களையும் முட்டாளாக்க வேண்டுமென்றால், மிஞ்சியுள்ள சாதாரண மக்கள் அணைவரையும் முட்டாளாக்கி விட வேண்டும், என்றால் அறிஞர்களின் வாக்கு பங்சராகிவிடும்.” என்ற விசயத்தை மிக நன்றாகவே தெரிந்துவைத்துக் கொண்டு சரியான நேரத்தில், மிக சரியாக பிரயோகம் செய்துவருகிறார்.

ஹிந்து மதத்தின் அடிப்படையான, மறுக்கவோ மாற்றப்படக்கூடாததுமான தத்துவம், மனிதர்களின் செயலுக்கேற்ற பலன் கிடைத்தே தீரும். அது பாவம், புண்ணியம் என்று இருவகை வகைப்படும்.   அதற்கொப்பவே அடுத்தப் பிறவியும்அமையும். இந்த பாவ-புண்ணிய, மறுபிறவிக் கோட்பாட்டை மறுப்பவனை ஹிந்துவாக ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி ஏற்றுக்கொள்ளாதவன், மறுபிறப்பை மறுக்கும் பிற மதத்தின் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டவனாக கருதப்பட வேண்டும்.
     சொல்ல வந்த விசயம் இது தான். ஸ்வாமி நித்யானந்த பரமஹம்சர், பாவ புண்ணியத்தையோ, மறுபிறப்பையோ ஏற்றுக்கொள்வதில்லை.!

யார் யாரை ஏமாற்றுகிறார்கள்...?
யாரெல்லாம் எப்போது ஏமாந்து போகிறார்கள்...?
யாரெல்லாம் எப்படி ஏமாற்றப் படுகிறார்க்ள்...?

கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள, பதற வைக்கும் கொலைக்காட்சி.




கோயம்புத்தூர் ஜூலை 13: கோயம்புத்தூர் சாய்பாபா காலணியில் உள்ள ஒரு டாஸ்மாக் அருகில், பட்டாப்பகலில் பொதுமக்கள் எல்லாரின் முன்பு நடந்த கொலை சிசி கேமராவில் பதிவாகியுள்ள சம்பவம் நேற்று நடந்துள்ளது.

பெய்ண்டர் வேலை பார்த்துவரும் என்.சந்தோஷ் குமார் (வயது 29) தன் இரு நண்பர்களுடன், சாய்பாபா காலணியில் உள்ள டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு வரும் போது அவர்களுக்கிடையே தகராறு நடந்ததாக கூறப்படுகிறது. உடனே மற்ற இருவரும் வேறு இரு நண்பர்களை போன் மூலம் அழைக்கவே, மோட்டர்பைக்கில் வந்த அவர்களும் சேர்ந்து சந்தோஷ்குமாரை நடுரோட்டிலேயே அடித்து நொறுக்கி, அருகில் கிடந்த கல்லால் தலையில் அடித்து இருக்கிறார்கள். இந்தச் செயலை செய்த நால்வரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

ரத்னபுரியைச் சேர்ந்த எம்.கிருஷ்ணன்(28), மதுரையைச் சேர்ந்த ஆர்.முருகன்(21), கண்ணப்பபுரத்தைச் சேர்ந்த எம்.ராமச்சந்திரன்(26) மற்றும் பி.கணேசன்(31) ஆகிய இந்த நால்வர் மீது கொலை முயற்ச்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேட்டுப்பாளையம் செல்லும் ரோட்டில், பகல் 1.30 மணியளவில் போக்குவரத்து அதிகமாக இருந்த சமயத்தில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. அப்போது வாகணங்களில் வந்தவர்களும், ரோட்டில் போய்க்கொண்டிருந்தவர்களும் வெறுமனே நின்று வேடிக்கை தான் பார்த்திருக்கிறார்கள்.

போலிஸ் வந்த பிறகு தான் கோயம்புத்தூர் மருத்துவக்கல்லூரியில், சந்தோஷ்குமார் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். மிகக் கொடூரமான முறையில் தாக்கப் பட்டிருந்ததால், மருத்துவ சிகிட்சை பலன் இன்றி செவ்வாய் கிழமை காலையில் சந்தோஷ்குமார் இறந்து போனார். சாய்பாபா காவல்நிலையத்தில் சம்பந்தப்பட்ட நால்வர் மீதும் கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொலை நடந்த இடத்திற்க்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவின் மூலம், கொலைச் சம்பவம் பதிவு செய்யப்பட்டிருந்ததால் குற்றவாளிகளை காவல்துறையினர் மிக எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.


பதற வைக்கும் கொலைக்காட்சி.

Tuesday, July 12, 2011

ஜெயலலிதா ’அரசுக்கு வந்த இரண்டே மாதத்திற்குள் 3900 கோடி வரி விதிப்பு, மக்களே வாங்கிக் கொண்ட விதி..!’ கருணாநிதி விமர்சனம்.

சென்னை ஜூலை 13:
நேற்று இரவு தமிழக அரசினால், பிறப்பிக்கப்பட்ட வாட் வரி மற்றும் கட்டண உயர்வு உத்தரவுகள் நள்ளிரவிலேயே அமலுக்கு வந்தன.

இதுவரை 4 சதவீதமாக வசூலிக்கப்பட்டு வந்த மதிப்புக் கூட்டு வரி மற்றும், வாட் வரி 5 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. விவசாய கருவிகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவை மீது இப்போது விதிக்கப்படும் 4 சதவீத வரி முழுமையாக விலக்கப்படுகிறது.

’மக்கள் மீது பாரத்தை ஏற்றக்கூடாது என்பதற்க்காக, திமுக அரசு வாட் வரியை திணிக்காமல் இருந்தது’ கருணாநிதி விளக்கம்.



இந்த அதிரடி நடவடிக்கையால் மொபைல் போன், டீவி, சிகரட், ஜவுளி, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விலை அதிகரிக்கும். டாஸ்மாக் கடைகள் மூலம் விற்கப்படும் மது வகைகளின் விலையை உயர்த்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 12 மணி நேரத்துக்குள் வரிகள் உயர்த்தப்பட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 அசையா சொத்துக்கள் மீதான பத்திரப்பதிவு, ஒப்பந்தங்கள், குத்தகை பத்திரப்பதிவு போன்றவையும்  வரிகளும் உயர்த்தப்படுகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக ரூ.300 கோடி வருமானம் கிடைக்கும்.

டி எல்சிடி திரை, எல்சிடி திரை (கொண்ட டீவி, கம்ப்யூட்டர் மானிட்டர்கள்) டிவிடி, சிடி, செல்போன், ஐ போன், ஐ பாட், அவற்றின் உதிரி பாகங்கள், உபரி சாதனங்கள் ஆகியவற்றின் மீது தற்போது 4 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. இனிமேல் அந்த பொருட்கள் மீது 14.5 சதவீதம் வரி விதிக்கப்படும். அதாவது 3 மடங்குக்கு அதிகமான வரி விதிக்கப்பட்டுள்ளது.



’அடுத்த மாதம் 4ஆம் தேதி சட்டசபை கூடும் முன்பே, மக்கள் மீது திணிக்கப்பட்ட வரி மக்களுக்கு எதிரானது’ என்றும்,ஜெயலலிதா ’அரசுக்கு வந்த இரண்டே மாதத்திற்குள் 3900 கோடி வரி விதிப்பு, மக்களே வாங்கிக் கொண்ட விதி..!’ கருணாநிதி விமர்சனம் செய்திருக்கிறார்.

தமிழ்நாடு வணிகர் சங்கம் இதற்க்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக போராட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Thursday, July 7, 2011

கிறிஸ்தவரான நயன்தாரா திருமணத்துக்குப் பின் மதம் மாறுவாரா?

குரூப் டான்ஸராக இருந்த ரமலத்தை காதலித்தார் பிரபு தேவா. 1995-ல் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ரமலத்தை பிரபு தேவா திருமணம் செய்து கொண்ட போது, பிரபுதேவா-விற்க்காக இந்து மதத்திற்க்கு மாறி ரமலத் என்றிருந்த தன் பெயரை லதா என்று மாற்றிக்கொண்டார்.

இவர்கள் திருமண நடந்து 15 வருடங்கள் ஆகியிருக்கின்றன. இவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன. 2008ல் இவர்களின் இளைய மகன் புற்றுநோயால் மரணம் அடைந்துவிட்டான். 2009 ஆம் வருடம் வில்லு திரைப்படத்தை தயாரித்துக் கொண்டிருக்கும் போது, நயன்தாரா வுக்கும் பிரபுதேவா விற்க்கும் காதல் ஏறப்பட்டது.



விவகாரம் மிகப்பெரியதான நிலையில், கோர்ட் வரை சென்று, பிரபுதேவா-ரம்லத் இருவரும் பரஸ்பரம் பிரிந்து செல்வதற்க்கான மனுவை சென்னை முதன்மை குடும்பநல கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

விவாகரத்து முறைப்படி, இருவருக்கும் 6 மாதகால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.  இந்த அவகாச காலத்தில், தனது இரண்டாம் திருமணத்திற்கான ஏற்பாடுகளை சரியாக செய்துகொண்டு, தீர்ப்புக்காக காத்திருந்தார் பிரபுதேவா.





நேற்று ஜூலை7ஆம் தேதி இருவருக்கும் விவாகரத்துக் கிடைத்தது. அதன் பிரகாரம், 1995ஆம் வருடம் ஆகஸ்ட்மாதம் 9ஆம் தேதி இவர்கள் செய்து கொண்ட திருமணம் செல்லாததாக கோர்ட் அறிவித்தது.

அடுத்து எல்லாரும் ஆவலுடன் காத்திருக்கும் செய்தி என்னவென்றால், பிரபுதேவா வுடன் திருமணம் செய்துகொண்ட பின், ரம்லத் இந்துவாக மாறினார். இப்போது. கிறிஸ்தவரான நயன் தாரா இந்துவாக மாறுவாரா? என்பது தான்.

புகழ் பெற்ற நடிகையான நயன்தாரா, ஒருமுறை திருமணமாகியருக்கு இரண்டாம் மனைவியாகுவதற்க்காக, தன் கிறிஸ்தவ மதத்தை விட்டு விடுவாரா?  அதிலும் தேவாலயத்துக்கு தவறாமல் வழிபடச் செல்லும் இவரது நிலைப்பாடு எவ்வாறு இருக்கக்கூடும் என்பது எல்லாரின் வியப்புக்குறிய ஆவலாக இருக்கிறது!


மற்றொரு செய்தி, நயன்தாரா இந்துமதத்திற்க்கு மாறிவிட வேண்டும் என்பது பிரபு தேவா குடும்பத்தின் எதிர்பார்ப்பாக உள்ளதாம், திருமணமும் இந்து முறைப்படித்தான் நடக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்களாம்.

Wednesday, July 6, 2011

படிப்பு விட்டது 1932ஆம் வருடம்! பட்டம் வாங்கியது 99ஆம் வயதில்!! பெரியவர் செய்தார் உலக சாதணை!!!




ரெட்மோண்ட் (ஆரிகன்) ஜூலை 7: ஆக கடைசியில், 99வயதில் தன்னுடைய  பட்டப்படிப்பை முடித்து பட்டமும் வாங்கியிருக்கிறார், லியோ ப்ளாஸ் என்ற பெரியவர்.
அமெரிக்காவில் ஆரிகனில் வசித்துவரும் இவர் 1932-ல் பட்டப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டவர்.
இப்போது ‘கிழக்கு ஆரிகன் பல்கலைக்கழகம்’ என அழைக்கப்படும் இந்தப் பல்கலைக்கழகம், 1932-ல் ‘கிழக்கு ஆரிகன் பள்ளி’ என்ற பெயரில் இயங்கி வந்த சமயத்தில், லியோ ப்ளாஸ் ஆசிரியர்க்கான படிப்பை பயின்று வந்திருக்கிறார். அந்த சமயத்தில் அவரது நண்பர் 150டாலர் வேலைக்கு அழைத்திருக்கிறார்.



”அந்த சமயத்தில் 150 டாலர் என்பது மிகப்பெரிய பணம்!” என இப்போது கூட நினைவுகூறும் லியோ, பட்டப்படிப்பை முடிக்க மிகக்குறிகிய காலமே இருந்த போதும், படிப்பை விட்டுவிட்டு வேலைக்கு போய் விட்டாராம். கடைசி நேரத்தில் வாங்க வேண்டிய பட்டத்தை வாங்காமல் விட்டது அவருக்கு ஒரு கவலையாக இருந்து வந்ததாம். ஆனால் இந்த 99 வயதில் மனநிறைவுடன் இருக்கிறார், பட்டம் கையில் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில்.

லியோ ப்ளாஸ், வரும் ஆகஸ்ட் மாதம் தனது 100வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார்.

பட்டப்படிப்பில், ’புதிய பட்டத்தைப் பெற்றிருக்கும் அதிக வயதானவர்’ என்கிற உலகசாதணையை இவர் ஏற்படுத்தியுள்ளார்.

இந்த பட்டத்தால் அவருக்கு லாபம் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் இந்த வயதில் கூட மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்து விட்டார்.


பிறந்த பச்சைக்குழந்தையை சூப் வைத்துக்குடிக்கும் சீனர்கள்(எச்சரிக்கை சிறுவயதினரோ,கர்ப்பிணிகளோ,இலகிய மனம்படைத்தவர்களோ இதை பார்ப்பதை தவிர்க்கவும்)







இந்த செய்தி பற்றி குறிப்பிடும், முன்னர் இந்த செய்தியையோ அல்லது வீடியோவையோ தயவு செய்து சிறுவயதினரோ…பெண்களோ…கர்ப்பிணிகளோ…தயவு செய்து பார்க்கவேண்டாம் என அறிவுறுத்துப்படுகிறார்கள் .

பச்சைக்குழந்தைகளை சூப் வைத்துக்குடிக்கும் இந்தச் சீனர்கள், ஈவு இரக்கம் என்றால் என்ன என்று கேட்பார்கள் போலிருக்கிறது. இந்தச் சீனர்கள், பிறந்த பச்சைக்குழந்தையை விலை கூடிய பல்வேறு மூலிகைளை அதோடு சேர்த்து, அவித்து பல மணி நேரம் கொதிக்க வைத்து அதனை துண்டு துண்டாக வெட்டி பரிமாறி உண்டு மகிழும் இந்த நரமாமிச உண்ணிகளை, கீழே உள்ள படங்களில் பாருங்கள்…!!

 வெளியிட்டுள்ள புகைப்படங்களோ அல்லது வீடியோவே உங்கள் மனதில் ஏதாவது தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். அதே நேரம் இப்படியும் சில மனிதர்கள் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதனை அறிந்து வைத்திருப்பதும் அவசியம் ஆகையால் ஆங்கிலத்தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியினை அப்படியே நாம் பிரசுரிக்கிறோம்.


 

 
Design by Nellai Murasu Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons