Tuesday, July 26, 2011

“வழக்கில் யாரையும் மாட்டிவிடும் எண்ணம் எனக்கில்லை” ராசா பேட்டி.

நியுடெல்லி, ஜூன் 26-நீதிமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரத்தை வழக்கில் இழுத்துள்ள முன்னால் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ராசா, தான் வேண்டுமென்று அவர்களை இழுக்கவில்லை என இன்று செவ்வாய் கிழமை அன்று நடந்த நிருபர்கள் கூட்டத்தில் கூறியிருக்கிறார்.

சிபிஐ-யின் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி தலைமையில் நடைப்பெற்றுவரும் நீதி விசாரணையில், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரத்தின் பெயர்களும் எடுக்கப்பட்டதால், அது குறித்து ராசாவின் வழக்கறிஞர், “எனக்கு யாரையும் மாட்டிவிடும் எண்ணம் கிடையாது” என்று ராசாவின் சார்பாக கூறியுள்ளார்.

மேலும், “பத்திரிக்கைகள் ராசாவின் வாக்குமூலத்தை திரித்து வெளியாக்கி உள்ளன” என்றும் கூறியுள்ளார்.

நேற்று திங்கள் அன்று நடந்த விவாதத்தில் 2ஜி அலைவரிசை, பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னிலையில் அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரத்தால் அங்கீகரிக்கப்பட்டே பரிவர்த்தணை செய்யப்பட்டது என்று ராசாவின் வழக்கறிஞர் சுஷில் குமார் கூறியிருந்தார்.

0 comments:

Post a Comment

 
Design by Nellai Murasu Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons