Wednesday, July 27, 2011

நார்வே தாக்குதல்....நடந்தது என்ன?



ஜூலை27-
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் கடந்த 22ஆம் தேதி, அந்நாட்டு பிரதமர் அலுவலகத்தில் குண்டு வெடித்தது. அதை தொடர்ந்து 2மணி நேரத்திற்குள் ஒஸ்லோவின் அருகே உடொயா என்ற இந்த சிறு தீவில் இளைஞர்களுக்கான தொழிற்கட்சியின் கோடை முகாம் நடந்து கொண்டிருந்த வேளையில், போலிஸ்காரர் போல சீருடை அணிந்திருந்த நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார்.

ஒஸ்லோவின் மையப் பகுதியில் குறைந்தது 7 பேரை பலிகொண்ட ஒரு குண்டுத் தாக்குதலின் பின்னர் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.
சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது. குண்டுவெடிப்பில் 7 பேரும், மர்ம நபரின் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 85 பேரும், உயிரிழந்துள்ளனர்.
இந்த இரு சம்பவங்கள் 32 வயதுடைய அண்டர்ஸ் பெஹ்ரின் ப்ரெய்விக் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டுக்குள் நார்வே காவல்துறையினர் சோதனையும் நடத்தியுள்ளனர்.


இதை தொடர்ந்து அவனிடம் நடத்திய விசாரணையின் ஆரம்பத்தில், இச்சம்பவத்தில் யாருக்கும் தொடர்பில்லை. தான் மட்டுமே இந்த தாக்குதல்களில் ஈடுபட்டதாக அவன் கூறி வந்தான். பிரதமரை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவித்திருக்கிறான்.

இவனுடைய பேஸ்புக்கை ஆராய்ந்து பார்த்தபோது, ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்கங்களில் அவனுடைய தீவிரவாத கருத்துக்களையும், உலகில் தீவிரவாத போக்குடையோரைப் பற்றிய தகவல்களையும் பதிந்துவந்துள்ளது அறியப்பட்டது.

பிரெவிக் பற்றிய இணையப் பதிவுகளைப் பார்க்கும்போது அவர் தீவிர வலதுசாரி மற்றும் முஸ்லிம் எதிர்ப்புக் கொள்கைகளை உடையவர் என்று குறிப்புணர்த்துவதாக நார்வே காவல்துறையினர் கூறுகின்றனர்.

ஃபேஸ்புக்கில் அவர் தன்னைப் பற்றி எழுதுகையில் தன்னை ஒரு கிறிஸ்தவர் என்றும் மரபு பேணுபவர் என்றும் அவர் வருணித்துள்ளார். ஆனால் இது உண்மையான் கிறிஸ்தவத்திற்க்கு எதிரான கொள்கை என்றும், கிறிஸ்துவை உண்மையாக நம்புகிறவர்கள் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என பல கிறிஸ்தவ அமைப்புகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து இருக்கின்றன.

பிரெவிக் ஒஸ்லோவில் வளர்ந்து, பின்னர் நகரத்திலிருந்து வெளியேறி பிரெவிக் ஜியோபார்ம் என்ற ஒரு விவசாய நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார்.



காய்கறிகள் பயிர் செய்வதற்காக தொடங்கப்பட்ட அந்த நிறுவனத்துக்காக பெருமளவில் வாங்கப்பட்ட  உரங்களை அடிப்படையாக கொண்டு அவர் குண்டு தயாரித்துள்ளார் என்று நார்வே ஊடகங்கள் ஊகம் தெரிவிக்கின்றன.

இவர் சில வருடங்கள் முன்புதான் வலது சாரி தீவிரவாதக் கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டிருந்தாரென்று இவரது நண்பர் ஒருவர் கூறுவதாக வெர்டென்ஸ் கங் என்ற நார்வே செய்தித்தாள் தெரிவிக்கிறது.

கருத்து பரிமாறுவதற்கான இணையதளங்களில் இவர் வலிமையான தேசியவாதக் கருத்துகளைக் கூறிவந்துள்ளார் என்றும் அப்பத்திரிகை கூறுகிறது.

தொடக்கத்தில் இந்த 2 தாக்குதல்களிலும் தனக்கு மட்டுமே பங்கு இருப்பதாக கூறி வந்த அவன் இதில் மேலும் 2 தீவிரவாதிகள் உடந்தை என்று தெரிவித்தான்.

இதில் மிகமுக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், தீவிரவாத போக்குள்ளவர்கள் அதற்கு காரணமாக இருப்பவர்களைத்தான் பலிகடா ஆக்குவார்கள், ஆனால் இந்த மனிதன் பிறர் மீதுள்ள ஆத்திரத்தில் தன் இனத்தின் மீதே கோபத்தைக் காட்டியிருக்கிறான். (வடிவேலு ஸ்டைல் எங்கெல்லாம் பரவியிருக்கப்பா....!)

நடந்த தாக்குதல்கள் 'கொடூர கனவுபோல இருக்கிறது' என நோர்வே பிரதமர் ஜென் ஸ்டொல்டன்பர்க் கூறியுள்ளார்.

ஒஸ்லோவில் நடந்த குண்டுவெடிப்பில் பிரதமரின் அலுவலகமும் சேதமடைந்திருந்தது. இவ்வெடிப்பில் கொல்லப்பட்டவர்களில் அரசாங்க அதிகாரிகளும் அடங்குவர்.

அவனை 8 வாரங்கள் காவல்துறையின் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். முதல் 4 வாரங்கள் சிறையில் அடைத்து வைத்திருக்குமாறும்
விசாரணையின் போது அவனுக்கு வெளி உலகில் இருந்து எந்தவிதமான தகவல் தொடர்பும் இருக்ககூடாது என்றும் தனது உத்தரவில் அறிவுறுத்தி உள்ளார்.

அண்டர்ஸ் பெஹ்ரின் ப்ரெய்விக் தன் கருத்துக்களை பதித்துவந்த ஃபேஸ்புக்கை யாரோ ‘ஆட்டய’( hack)போட்டுவிட்டார்கள் என்பது சூடான செய்தி.

0 comments:

Post a Comment

 
Design by Nellai Murasu Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons