Sunday, July 17, 2011

மும்பை தாதரில் வெடி குண்டு வைத்தது யார்?



மும்பை தாதரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம், இந்திய புலனாய்வுத்துறைக்கு மிக குழப்பமான விவகாரமாக இருக்கப்போகிறது.

1.ஜுலை 13ஆம் தேதி தாதரில் குண்டுவெடிப்பதற்க்கு, இருநாட்களுக்கு முன், 2008ஆம் வருட, குஜராத் தொடர்குண்டு வெடிப்புக்குக் காரணமாக இருந்த, இந்திய முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த, ரியாஸும் அவனது கூட்டாளியும் அஹமதாபாத்தில் கைது செய்யப்பட்டனர். எனவே இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த தாதர் தொடர்வெடிகுண்டு தாக்குதலை நடத்தியிருக்கலாம்.
    ஒருவேளை இவர்கள் இந்த குண்டுவெடிப்பு வேலைகளை செய்திருக்க, இந்திய புலனாய்வுத்துறைக்கு பெரிய பிடிமானம் ஏது இருப்பதாக படாவிட்டாலும், உணவுகொடுத்த மண்ணிற்க்கும், பிறந்த- சொந்த மண்ணிற்க்கும் துரோகம் செய்துவரும், இந்த உடன் பிறவா சகோதரர்கள், இதற்க்கு முன் செய்திருக்கும் ஸ்டைல், இப்போதும் ஒத்துப்போகிறது.
   உணவு சாப்பிடும் டிபன் கேரியரில், வெடிகுண்டை மறைத்துவைத்து, அழிவை உண்டக்குவது தான் இவர்கள் ஸ்டைல். அதே முறைதான் இப்போது தாதாரிலும்
நடந்திருக்கிறது.
-எனவே இந்திய முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இதைச் செய்திருக்க வாய்ப்பிருக்கிறது.

2. அமெரிக்கா பாகிஸ்தான் உறவு சீர் கெட்டுவரும் இந்த வேளையில், இந்த   வாரம் ஹிலரி கிளிண்டன்  இந்தியா வர இருப்பதால், அது பிடிக்காமல், பாகிஸ்தானின் உளவுப்படை ஐ.ஸ்.ஐ வழக்கம் போல் அதன் சிறுபிள்ளைத்தனமான இந்த வேலையை செய்திருக்கலாம்.



3.மிகவும் யோசிக்க வேண்டிய ஒரு காரியம் நடந்திருக்கிறது.
2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பை நகருக்குள் புகுந்து வெறித்தனமாக தாக்குதல் நடத்தியதில், 25 வெளிநாட்டவர் உள்பட 166 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். 304 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அனைவரும் லஷ்கர் இ தொய்பா என்பது விசாரணையின் மூலம் தெரிய வந்தது. பத்து பேரில் 9 பேர் கொல்லப்பட்டு விட, கசாப் மட்டுமே உயிருடன் பிடிபட்ட்டான்.



 உலகம் முழுவதிலும் ஹவாலா மற்றும் போதை மருந்து கடத்தலில் முதலாவதாக இருப்பது தாவூத் இப்ராஹீமின் ‘டி-கம்பெனி’!. தான் செய்யும் குற்றச்செயல்களுக்கு புனிதமான இஸ்லாமைச் சேர்ந்தவர்களை, மததீவிரவாதிகளாக மூளைச்சலவைச் செய்து, தவறான வழியில் பயன்படுத்திவருகிறான் தாவூத். குஜராத்தில் நடைபெற்ற பயங்கர தொடர்வெடிகுண்டு தாக்குதலுக்கு மூலகாரணமாக இருந்தது பாகிஸ்தானின் லஸ்கர்-ஈ-தொய்பா இயக்கம், அதற்க்கு பண உதவி செய்தது, தாவூத் இப்ராஹீம் என்கிறார் திரு.பில்வார்னர் என அழைக்கப்படும் அமெரிக்க தனியார் துப்பறிவாளர். (இவர் எஃப் பி ஐ ய்-ன், இன்ஃப்ரா கார்ட் என்ற பிரிவில் அங்கத்தினராகவும் உள்ளார்.) மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்த கொலைவெறித்தனமான தாக்குதலுக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது தாவூது இப்ராஹிம்.
2008-ல் தாஜ்ஹோட்டல் தாக்குதலில் ஈடுபட்டது பாகிஸ்தானின் லஸ்கர்-ஈ-தொய்பா இயக்கம். அதில் உயிரோடு பிடிபட்டவன் முஹம்மத் அஜ்மல் கசாப். இவனுக்கு 2010 ஆம் வருடம் மே மாதம் 3ஆம் தேதி, பம்பாய் உயர்நீதி மன்றம் மரணத்தண்டனை விதித்தது. ( ஆனால் ஜெயிலில் இருந்து கொண்டு, இன்னமும் பிரியாணி சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறான்).







சொல்ல வந்த மூன்றாவது விசயத்தை முடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதாவது, தாதர் தொடர் வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் நடந்த தேதி தான், மரணத்தண்டனை வாங்கிக் கொண்டு இன்னமும் சாகாமல், ஜெயிலில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் முஹம்மத் அஜ்மல் கசாபின் பிறந்த நாள்!.
எனவே தாதர் வெடிகுண்டு சம்பவத்திற்க்கும், தாவூத் இப்ராஹிம்-க்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கக்கூடும்.

 உலகில் பிரசித்தமான, இண்டர்போலுக்கு அடுத்து செயல் திறனில் கூடியவர்கள், நமது இந்திய புலனாய்வுத்துறை. நிச்சயம் வெகு விரைவில் உண்மையை வெளிக்கொண்டுவந்து விடுவார்கள்.

0 comments:

Post a Comment

 
Design by Nellai Murasu Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons