Tuesday, July 26, 2011

தண்ணீர் தொட்டிக்குள் 27வயது பெண் சடலம்...!

புதுடெல்லி,ஜூலை26,2011-
மேற்க்கு டெல்லியில், வீட்டின் மேலுள்ள தண்ணீர் டாங்கியில், அழுகிய நிலையில், 27 வயதான நேபாளி இளம் பெண்ணின் சடலம்.

டெல்லி, பாபா ஹரிதாஷ் நகரில் உள்ள ஒரு வீட்டின் மேல் கூரையில் இருந்த தண்ணீர் டாங்கியில், ஆஷா எனும் பெயர் கொண்ட இந்த நேபாளி பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதே வீட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இவர் வசித்து வந்ததாக டெல்லி காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

இது ஒரு கொலையாக இருக்கக்கூடும் என்றும், கொலைக்கு முன் கற்பழிப்பு சம்பந்தமாக ஏதும் நிகழ்ந்திருக்கவில்லை, ஆனாலும் மருத்துவ பரிசோதனைக்காக காத்திருப்பதாக அந்த காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

எதோ அழுகிய வாடை வருவதாக பக்கத்து வீட்டுக்காரர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் பரிசோதித்துப் பார்த்தபோது இந்த சடலத்தை கண்டிருக்கிறார்கள்.

0 comments:

Post a Comment

 
Design by Nellai Murasu Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons