Sunday, June 19, 2011

கற்ப்பழிக்க முயன்ற இரு வெறியர்களால், கத்தியால் குத்தப்பட்டு, சிறுமி கண்களை இழந்த கொடூரம்,

கன்னுஜ்:- உத்தரபிரதேசம்,குர்புராவில் உள்ள கன்னுஜ் கிராமத்தில், 14 வயதுடைய, ப்ரீதீ என்ற சிறுமி, அவளை கற்ப்பழிக்க முயன்ற இரு வெறியர்களால், கத்தியால் குத்தப்பட்டு, கண்களை இழந்த கொடூரம், நேற்று, சனிக்கிழமை அன்று நடந்துள்ளது.
   குல்தீப் மற்றும் நிரஜ்ஜன் என்ற இரு வெறியர்கள், அந்த சிறுமியை, வயல் வெளிக்கு இழுத்துச் சென்று, கற்ப்பழிக்க முயற்ச்சி செய்த பொது, சிறுமி மறுத்த காரணத்தால் அவள் இரு கண்களையும் கத்தியால் மிருகத்தனமாக குத்தியிருக்கிறார்கள்.
   வயலில் கிடந்த சிறுமியை பார்த்த கிராமத்து ஜனங்களால், அவளை, மருத்துவமணையில் சேர்க்கப்பட்டிருக்கிறாள்.
    சிறுமியின் கண்களின் கருவிழி முழுதும் சேதமடைந்து இருப்பதால், அவள் பார்வையை மீண்டும் அடைவது என்பது முடியாத காரியம், என்று சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
      சிறுமி இப்போது கான்பூர் மருத்துவமணையில் சிகிட்சை பெற்றுவருவதாக தெரிகிறது.
    இதற்கிடையில், குற்றவாளிகளிள் ஒருவனான நிரஜ்ஜன் கைது செய்யப்பட்டிருக்கிறான்.
      “குற்றவாளிகள் இருவரும் சிறுமியின் கிராமத்தை சேர்ந்த்வர்கள் தான்” என்று காவல் துறை அதிகாரி ராஜேந்திர சிங் கூறியுள்ளார்.
     கற்பழிப்பு மற்றும் கொலை முயற்சிக்கான வழக்கு, குற்றவாளிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
      அந்த சிறுமி முதல் முறையாக காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட போது, வழக்கை பதிவு செய்யாது விட்ட காரணத்திற்காக, பணியில் இருந்த ஒரு போலிஸ்காரர் மற்றும் ஒரு சப்-இன்ஸ்பெக்டரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

0 comments:

Post a Comment

 
Design by Nellai Murasu Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons